கட்டிய கயிற்றை அவிழ்த்தே கன்றும்
ஒட்டியும் உறவாடி ஒன்றுக்கொன்று மகிழுதே
முட்டியே மோதி முற்றத்தில் விளையாடுகையில்/
கிட்டிடும் அன்பினை கண்களால் ரசித்திட/
எட்டிடும் தூரத்திலே தாயது இல்லையே/
ஜன்ஸி கபூர்
கட்டிய கயிற்றை அவிழ்த்தே கன்றும்
ஒட்டியும் உறவாடி ஒன்றுக்கொன்று மகிழுதே
முட்டியே மோதி முற்றத்தில் விளையாடுகையில்/
கிட்டிடும் அன்பினை கண்களால் ரசித்திட/
எட்டிடும் தூரத்திலே தாயது இல்லையே/
ஜன்ஸி கபூர்
தனதத்தன் மகளாக தரித்தாரே காரைக்காலில்/
தரணியும் புகழ்ந்திட தந்தாரே திருவந்தாதி/
புனிதவதி இயற்பெயராம் புகழானார் அம்மையாராக/
புனிதமான தெய்வமுமாகி புகுந்தாரே மனங்களில்/
சிறுவயது சிவபக்தையின் சிந்தைக்குள் சிவநாமம்/
சிவபெருமான் சிறப்புக்களை சிறப்பாக யாத்தாரே/
இசைத்தமிழின் அன்னை இசைத்தாரே பனுவல்களை/
இறைவனைப் பாடியே இணைந்தாரே திருப்பதிகத்துள்/
கயிலை மலைதனை கைகளினாலே நடந்தே/
கண்ணியமும் பெற்றார் களித்தாரே சிவனும்/
மாங்கனித் திருவிழா மாண்பாக்கும் அம்மையாரை/
மக்களும் தொழுதே மனநிறைவும் பெற்றிடுவார்/
திருக்கோயில் சிற்பங்களில் திருமேனியைப் பதித்திட்டார்/
திருவடியின் கீழ்ப்பேற்றை திருவருளாகப் பெற்றிட்டார்/
திருவாலங் காட்டில் விதைக்கப்பட்டே உரமானார்/
திருவுருவம் கொண்டே சிறக்கின்றார் வரலாறுகளில்/
குறள் - 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கு இயன்றது அறம்.
பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல்
பொருத்திடுமே குற்றத்தில் வருத்திடுமே பாவத்தில்
திருந்திடலாம் அறத்துள் வாழ்வினைப் பிணைத்தே
சிறந்திடலாம் மனிதத்துள் நமையும் இருத்தி
குறள் - 39
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
அறத்தோடு இசைந்து வாழ்வதே பேரின்பம்
அன்றில் பறந்தோடுமே உள்ளத்தின் இன்பம்
உளக் குற்றத்தால் மறைகின்ற புகழும்
உணர்வினைச் சிதைத்து துன்பத்தில் வீழ்த்துமே