About Me

2021/04/22

காரைக்கால் அம்மையார்

தனதத்தன் மகளாக தரித்தாரே காரைக்காலில்/

தரணியும் புகழ்ந்திட தந்தாரே திருவந்தாதி/

புனிதவதி இயற்பெயராம் புகழானார் அம்மையாராக/

புனிதமான தெய்வமுமாகி புகுந்தாரே மனங்களில்/


சிறுவயது சிவபக்தையின் சிந்தைக்குள் சிவநாமம்/

சிவபெருமான் சிறப்புக்களை சிறப்பாக யாத்தாரே/

இசைத்தமிழின் அன்னை இசைத்தாரே பனுவல்களை/

இறைவனைப் பாடியே இணைந்தாரே திருப்பதிகத்துள்/


கயிலை மலைதனை கைகளினாலே நடந்தே/

கண்ணியமும் பெற்றார் களித்தாரே சிவனும்/

மாங்கனித் திருவிழா மாண்பாக்கும் அம்மையாரை/

மக்களும் தொழுதே மனநிறைவும் பெற்றிடுவார்/


திருக்கோயில் சிற்பங்களில்  திருமேனியைப் பதித்திட்டார்/

திருவடியின் கீழ்ப்பேற்றை திருவருளாகப் பெற்றிட்டார்/

திருவாலங் காட்டில் விதைக்கப்பட்டே உரமானார்/

திருவுருவம் கொண்டே சிறக்கின்றார் வரலாறுகளில்/

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!