About Me

2012/08/14

சித்திரம் பேசுதடீ


மனிதனது அறிவின் வெளிப்பாடாக அறிவியற் கலைகளும், உணர்வின் வெளிப்பாடாக அழகியற் கலைகளும் தோற்றம் பெற்றுள்ளன. ஓவியம் அல்லது சித்திரம் என்பது அழகியற் கலையாகும்.

ஓவியம் எனக்கு மிகவும் பிடித்தமான கலை. என் தந்தை மிகச்சிறந்த ஓவியர். தனது ஆசிரியர்ப் பயிற்சிசாலையில் அவர் வரைந்து தயாரித்த ஓவிய ஆல்பத்தினைப் புரட்டிப் புரட்டி பார்த்து ரசித்தே, என் பிஞ்சு விரல்கள் அன்றைய நாட்களில் பலதடவைகள் பூரித்திருக்கின்றன. அந்தப் பரம்பரை வழிக்கடத்தலால் எங்கள் குடும்பத்தில் நானும் என் சகோதரிகளும் பாடசாலை நாட்களில் ஓவியத்தில் மிக விருப்புடன் வரைந்துமுள்ளோம். அந்த ஓவிய ஈர்ப்பு அதன் வரலாற்று நகர்வுகளையும் என் வலைப்பூவில் விருப்புடன் பதிக்கின்றதின்று.

உலக வரலாற்றில் கிரேக்கர். எகிப்தியர், உரோமர் , சீனர் , இந்தியர் போன்றே முஸ்லிம்களும் கலைத்துறையில் தம் முத்திரை பதித்துள்ளனர். இஸ்லாம் மனித, மிருக உருவங்கள் வரைவதைத் தடைசெய்வதால், அவர்களின் கவனம் அரபு எழுத்தணிக்கலையில் சிறப்புற்று விளங்கியது.

"அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான்" எனும் ஹதீஸின் எண்ணக்கரு இக்கவின்கலைக்கு ஆதாரமாகக் காணப்படுகின்றது. அல்குர்ஆனாலும், ஸூன்னாவாலும் தூண்டப்பட்ட இவ் எழுத்தணிக்கலை முஸ்லிம்களின் அழகுணர்ச்சியை மேவிநிற்கின்றது எனும் முகவுரையுடன்
ஓவியத்தின் மீதுள்ள என் ரசிப்பை எழுத்தாக்கி நகரவிடுகின்றேன் நளினத்துடன்!

ஓவியம் என்ற சொல்லானாது " ஓவம்" எனக் குறிப்பிடப்பட்டு, சங்க காலத்தில் செய்யுள்கள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ளன. இது அக்காலத்தில் ஓவியம் வளர்ச்சியடைந்துள்ளதை நிருபிக்குமொரு சான்றாகும்.

ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்
              (பதிற்றுப்பத்து.88 : 28)
ஓவத் தன்ன இடனுடை வரைப்பின்
              (புறநானூறு. 251 1)
வத் தன்ன வினைபுனை நல்லில்
              (அகநானூறு. 98 11)

நற்றிணைப் பாடல் (118:7) ஒன்று ஓவியரை 'ஓவ மாக்கள்' என்கிறது. 

மதுரைக் காஞ்சியோ, ஓவியர்களை பின்வருமாறு கூறுகின்றது எக்காட்சியினையும் தமது ஓவியத்திற்குள் கொண்டு வந்து ஒப்பிட்டுக் காட்டுவர்; ஓவியர்கள், எதனையும்  நுட்பமாக உணர்ந்தவர்கள். ஆழமான நோக்குடையவர் என்று கூறுகிறது. 
இதனால் 
அவர்களைக் 'கண்ணுள் வினைஞர்' என்று பெயரிட்டு அழைக்கிறது அது!

உண்மையில் ஓவியர்கள் தாம் வரையும் ஓவியத்தினூடாக காட்சிகளின் உயிர்ப்புத்தன்மையை நம் கண்ணுக்குள் ஊடுகடத்தி நிறுத்தி வைப்பவர்கள் என்பதை அக்கால மக்கள் ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடே  மேற்கூறப்பட்ட செய்யுளின் கருத்தாக அமைகிறது.


ஓவியர்களின் எழுதுகோல்கள் தூரிகை எனப்படும். சங்க காலத்தில்  இத்தூரிகையை  நற்றிணைப் பாடலொன்று " துகிலிகை"  என அழைக்கின்றது. இதன் கருத்தாவது , பாதிரி மலரானது அரக்கு மூலமாக இறக்கை ஒட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய
துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி (நற்றிணை. 118)


ஓவியமானது தூரிகையால் முதலில் இரேகைகளால் வரையப்படும். இவ்வாறு வரையப்படும் வர்ணங்கள் தீட்டப்பட முன்னர் காட்சிப்படுத்தப்படும் இவ்வோவியங்களை சங்ககாலப் பாடல்கள்  "புனையா ஓவியம் " என விளித்துள்ளன.


சங்க காலமென்பது காதலொழுக்கத்தை மேவிய காலமாகும். இக் காலத்தில் காதலனொருவன், தன் காதலை தலைவி ஏற்காவிட்டால்,  அவள் உருவத்தை புனையா ஓவியமாக வரைந்து, அதனை பனை மடலில் செய்யப்பட்ட குதிரையில் அமர்ந்து ஊருக்குக் காட்சிப்படுத்தி முறையிடுவான்

நாமின்று ஓவியங்கள்  வீடுகள், கடைகள், காட்சிசாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். சங்ககால மக்களும் தாம் வரையும் ஓவியங்களை  வீடுகள், பொது இடங்களிலும், மன்னர்கள் தமது அரண்மணை , அந்தப்புரங்களிலும் காட்சிப்படுத்தினார்கள்.

"சித்திர மாடத்துத் துஞ்சிய மணிமாறன் " என பாண்டியன் மன்னன் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவதற்குக் காரணம் அவர் தனது தங்குமிடத்தில் நிறைய சித்திரங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்.


பாண்டிய மன்னரின் அரண்மனை அந்தப்புரச் சுவர்களிலும் அழகிய மலர்க்கொடிகளினாலான சித்திரங்கள் வரையப்பட்டிருப்பதாக  "நெடுநல்வாடை  -  ( 110  - 114  )  யிலுள்ள செய்யுட்பாக்கள் குறிப்பிடுகின்றன.


17ம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரையிலுள்ள சுவரோவியங்கள்

அவ்வாறே சோழர் மன்னரின் அரண்மனைச் சுவரின் வெளிப்புறத்திலும் பல ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. சாலைகளில் செல்லும் தேர்கள் எழுப்பிய புழுதிகள் வெந்நிற அச் சுவர்கள் மீது படிந்து சாம்பலில் புரண்ட யானையொன்றின் தோற்றத்தை ஏற்படுத்தியிருந்ததாக பட்டினப்பாலை  பாக்கள் அழகுற விளக்கின்றன.












சோழர்கால ஓவியங்கள் பாண்டி மாதேவி அமர்ந்திருந்த அந்தப்புரக் கட்டிலுக்கு மேலே இருந்த விதானச் சுவரில் ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன. இவற்றில் மேட இராசி முதலிய இராசிகளின் உருவங்கள் இருந்தன. மேலும் பாண்டியரது குல முதல்வனான சந்திரனோடு அவனது காதல் மனைவி உரோகிணி சேர்ந்திருக்கும் காட்சியும் தீட்டப் பட்டிருந்ததென நெடுநல் வாடை கூறுகிறது.


அவ்வாறே மதுரைக்கண்மையிலுள்ள திருப்பரங்குன்றத்திலுள்ள "எழுத்து நிலை மண்டபத்தில்"  ரதி, மன்மதனின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன என பரிபாடல் விளக்குகின்றது.

                                  மன்மதனும் ரதியும்
அரசர்களின் சிந்தையையே வென்ற ஓவியங்கள், சாதாரண நம்மனங்களைச் சுண்டியிழுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஓவியங்களின் வரலாற்றை விழிகள் மேயும் போது பல சுவாரஸியமான விடயங்களுடன் நாம் ஒருமித்து விடுகின்றோம்.

ஓவியத்தின் உரிமையாளர் ஓவியராவார். ஓவியர் என்பவர் தன் உள்ளத்தில் நிழலாடும் நகர்வுகளை தூரிகை வழியாக உயிர்ப்பிக்கின்ற கலைஞராவார். ஓவியர் தன்னகத்தே கொண்டுள்ள கலைத்துவம் படிந்துள்ள அருந்திறன் கருத்துப்புலப்படுத்தலோடு வெளிப்படுத்தப்படும் போது அவ்வோவியம் உயிர்ப்படைகின்றது. அழகான உயிரோட்டமுள்ள எந்தவொரு  ஓவியமும் என் ரசிப்பைத் தொட்டு நிற்கும்.


ஓவியத்துறையானது 16ம் நுற்றாண்டிலிருந்து இன்றுவரை பரிணாமவளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவுகளை நம்முன்னால் நிலை நிறுத்திய ஓவியர்கள் பலர். அவர்களுள் சிலராக ரவீந்திரநாத் தாகூர்,  ரவி வர்மா, மைக்கல் ஏஞ்சலோ, எம்ரான் வான்கோ பிக்காசோ  என்போரை இப்பட்டியலில் இணைத்துள்ளேன்.


                   லியாடோனோ டாவின்சி மொனோலிசா


                             இந்திய ஓவியர் ரவிவர்மாவின் ஓவியம் -
                            அர்ச்சுனனும் சுபத்திரையும் தனித்திருத்தல்


    பிக்காஸோ 


                       மைக்கல் ஏஞ்சலோவின் ஓவியமொன்று

சிகிரியா, அஜந்தா (அழுத்தி இதனைப் பார்க்க ) குகை ஓவியங்கள் இன்றும் ஓவியத்தின் மகிமைகளை உலகிற்குப் பறைசாற்றும் சிறப்புமிகு குகை ஓவியங்களாகும்.பழைமையான குகை ஓவியமானது பிரான்ஸ்- ஸ்பெயின் எல்லையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சான் ஓவியங்களாகும். இங்கு மிருக உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சான் மக்களின் தலைவனான மருத்துவன் மிருகங்களின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து வலிமை பெற்று அவ்வலிமையால் , தன் குடியானவர்களை காக்கும் செயற்பாடுகளின் பின்னனியில் இவ்வாறான மிருகங்களின் உருவங்களை அவர்கள் விரும்பிப் பொறித்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் பல தகவல்களை நமக்கு முன்வைக்கின்றனர்.


                  சீகிரியா குகை ஓவியம் ( இதனை அழுத்திப் பார்க்க)


                                                    அஜந்தா குகைச்சிற்பங்கள்


                        அஜந்தா குகை ஓவியமொன்று

குகையோவியங்களுக்குப் பிறகு ஓவியக்கலை ஆசிய, மற்றும் எகிப்தில் நன்கு வளர்ச்சி பெற்றது.

எகிப்தியர்கள் தமது ஓவியங்களை கணிதசூத்திரத்தைக் கொண்டு வரைந்தார்கள். இவை இருபரிமாண முறையில் வரையப்பட்ட ஓவியங்களாகும். இவர்களின் ஓவியங்களில் தலை,கால் எல்லாம் பக்கவாட்டில் வரையப்பட்டுள்ளது. தசை, விரல்கள் காணப்படாது. பொருட்கள் ஒரே சீரான அளவில் காணப்படும். இதில் உயிரோட்டத்தைக் காணமுடியாது. எல்லோரின் முகங்களும் அந்தஸ்து, பால் வேறுபாடின்றி ஒரே விதமாகவே காணப்படுகின்றன.
எகிப்தியர் ஓவியம்
மூவாயிரம் வருடமாக எகிப்தியர் ஒரே விதமான ஓவியங்கள் , சிற்பத்தையே வரைந்தார்கள். இதனால் இவர்களின் ஓவியத்திலும், மெசப்பதேமியர்களின் ஓவியத்திலும் மலர்ச்சி பெறப்படவில்லை. ஏனெனில் இவர்களின் ஓவியத்தில் கற்பனையே இருந்தது.

எகிப்தியர்களை அடியொற்றி ஓவியத்தினுள் நுழைந்தவர்கள் கிரேக்கர்கள் ஆவார்கள். இவர்கள் தமது  கண்களால் உள்வாங்கியதை தம் ஆத்மாவுக்குள் செருகி உயிரோட்டமுள்ளதாகவும், ஒளிமயமானதாகவுமுள்ள ஓவியங்களை வரைந்தார்கள். அங்க  அசைவுகளும், தசை, நரம்பமைப்புக்களும் துல்லியமாகத் தெரியும் விதத்தில்  நுட்பமாக அவதானித்து வரையப்பட்டது. இயற்கையாக உள்ளதை உள்ளபடியே தந்தவர்கள் இக்கிரேக்கர்களே.. !



ஓவியத்திற்கான விதி, எடை, சமனிலை என்பவற்றை நிர்ணயித்து அழகான ஓவியங்கள் பிறப்பெடுக்க கிரேக்கர்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் அளப்பரியது. இவர்களது ஓவியங்கள் முப்பரிமாணத்தைக் காட்டி நின்றன. இங்கு நரம்பு, தசையமைப்புக்கள் வெளிப்படுத்தப்படுவதால் உயிர்ப்புத்தன்மையை நாம் காணலாம்



                                     கிரேக்க ஓவியம்
யதார்த்த வாழ்வியலின் செயற்பாடுகள், இயற்கைக் காட்சிகள், வரலாற்றுச் சம்பவங்கள், உயிரினங்கள், இறைவனின் அற்புதப் படைப்புக்கள், திருவிழாக்காட்சிகள், சமய நிகழ்வுகள், கடவுளின் உருவம், அரச வாழ்வியலின் பிரதிபலிப்புக்கள் போன்ற பலவற்றுடன் தொடர்புபட்டே பெரும்பாலும் ஓவியங்கள் வரையப்படுகின்றன.        வரையப்பட்டுள்ளன.


இவ் ஓவியங்களில் மக்களின் கலை, கலாசார, பின்னணிகளும், சமூக நலன்பாடுகளும் , அரசியலீடுபாடுகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.


                                                    ராஜஸ்தானியப் பெண்கள்
ஓவியமானது நமது வாழ்வின்  நிகழ்வுகள், தேவைகளை பிரதிபலிப்பவையாக அமையும் போதே காலத்தையும் வென்று நிற்கின்றன. நவீனத்துவம் ஓவியத்திலும் புகுத்தப்படுகின்றது. ஆனால் அவை தலைமுறையினரை நெறிப்படுத்தக்கூடியதாக அமைதல் வேண்டும். இல்லாவிடில் காலக்கண்ணாடி அதனை நிராகரித்து விடும். அந்த நவீனத்துவ சிந்தனை நமக்குள் கேலி எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.


                           ரிமெக்ஸ் செய்யப்பட்டுள்ள மொனோலிசா

 ஓர் ஓவியத்தின் உயிர்ப்புக்கு அவற்றின் வண்ணக்கலவையின் பொருத்தப்பாடே காரணமாக அமைகின்றதெனலாம். ஆரம்ப காலங்களில் இயற்கை வர்ணங்களாகத் தாவரச்சாறுகளைப் பயன்படுத்தி வந்தாலும், இன்றைய நெருக்கடி வாழ்வுக்குள் சிக்குண்டதன் பிரதிபலிப்பாக இயற்கை வர்ணங்கள் தயாரிப்பிற்கான நேரமின்மையாலும், நீண்டகாலம் வர்ணங்கள் மங்காமலிருப்பதற்காகவும் கடைகளில் விற்பனை செய்யப்படும் இரசாயன வர்ணங்களே பயன்படுத்தப்படுகின்றன.


முற்காலத்தில் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் தற்காலத்தில் பெரும்பாலும் கடதாசிகளிலேயே வரையப்படுகின்றன. ஓவியம் வரையும் கடதாசி சாணம் நனைத்த நீரில் தோய்த்து வரையப்படும் போது சுவர்களில் வரையப்படும் தோற்றத்தை அளிக்கின்றது எனக்கூறப்படுகின்றது.

எந்தவொரு சிறப்பான செயலொன்றை நாம் முன்வைக்க வேண்டுமாயின் அதற்கான உரிய பயிற்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


ஓவியம் வரையும் ஆர்வம் பெரும்பாலும் சிறுவர்களிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இதனாலேயே அவர்களின் மனங்களில் மகிழ்ச்சியை நிரப்புவதற்காக கார்ட்டூன் சித்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அரசியல் எண்ணக்கருக்கள் கேலிச்சித்திரங்களாக வெளிப்படுத்தப்படும் போது அவற்றை நாம் நமது மூளையைப் பயன்படுத்தி கருத்துக்களை ஆராயவும் வேண்டியுள்ளது.

நாம் பார்ப்பதை வரைவதை விட, பார்த்ததை மனதுள் உள்வாங்கி அவற்றை வரையும் போதே அவ்வோவியங்களும் பேச ஆரம்பிக்கின்றன. எனவே ஓவியம் வரைவதாயின் நாம் நமது மனக்கண்ணில் வரைய வேண்டிய சித்திரத்தை நிலை நிறுத்த வேண்டும். ஒரு காட்சியை அவ்வாறே நகலெடுப்பதும், அதனை வரைவதும் ஓவியர்களின் உத்தியாகக் கருதப்படுகின்றது. தான் கண்டு ரசித்தவற்றை, அதே ரசனையுடன் வாசகர்களுக்கு வழங்குவதில் பெரும் சவால்கள் ஓவியர்களுக்கு ஏற்படும். அச் சவால்களை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் போது நமக்குள் சிறப்பான ஓவியங்கள் கிடைக்கின்றன.


நான் முன்பு "இண்டியன் இங்க் " எனப்படும் வர்ணத்தை , நிப் பேனாவால் நனைத்து வரைந்த ஓவியங்கள் என் கண்முன்னால் நிழலாடுகின்றன இத் தருணத்தில் !

கருத்து வெளிப்பாடுகளாகவோ, அலங்காரமாகவோ ஓவியத்தை வரையலாம். பொருத்தமான கடதாசி, உரிய இலக்கம் கொண்ட தூரிகை பொருத்தமான வர்ணங்கள் மற்றும் துடைப்பதற்கான துணி, பென்சில் அல்லது நிப் பேனா உள்ளிட்ட எழுதுகருவிகளுடன் நாம் நமது சித்திரப்பயணத்தைத் தொடரலாம்.


முதலில் அகக்கண்ணில் நிறுத்தப்பட்ட உருவத்தை பென்சிலில் அல்லது நிப் பேனாவால்  நேர்த்தியாக அதாவது ஒருசீராக வரையவேண்டும். உருவம் வரைந்த பின்னர் பொருத்தமான வர்ணங்களை உபயோகித்து அதன் வெளிப்புறக் கோடுகளை வரைய வேண்டும் (Out line). அதன் பின்னரே பிரஷ்ஷை உரிய விதத்தில் வர்ணங்களில் நனைத்து, அவ் வர்ணங்களை ஓவியத்தின் உட்பகுதிகளில் சீராக நிரப்ப வேண்டும். ஏனைய பகுதிகளில் வரணங்கள் தவறுதலாகப் பட்டுவிட்டால் அதனை துணி மூலம் அகற்றலாம். அவ்வாறே தூரிகையையும் நன்றாக நீரில் கழுவியே பயன்படுத்த வேண்டும். சிறப்பான ஓவியங்களாயின் அதற்குரிய சட்டகமிட்டு (பிரேம்) வீடுகளில் காட்சிப்படுத்தலாம். அல்லது விற்பனை செய்யலாம்.


ஓர் சினிமா வெற்றி பெற வேண்டுமாயின் அதில் காட்சியமைப்புக்கள் சிறப்பாகக் காணப்படல் வேண்டும். இதற்கும் ஒவியத்திற்குமிடையிலான தொடர்பு அவசியமாகப்படுகின்றது. எனவே திரைப்படம் சார்ந்த தொழினுட்ப வளர்ச்சி, ஆன்மீகம், அரசியல், வாழ்க்கைத்தரம், புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஓவியம் தன் முத்திரையைப் பதித்துள்ளது. சினிமா நடிகர் சிவகுமார் அவர்களின் பல சிறப்பான ஓவியங்களை நான் ரசித்துள்ளேன். அவ்வாறே எனது பாடசாலை நண்பி ஆசிரியை சிசிலியா பெட்டர்ஸன் அவர்களின் ஓவியங்களையும் நான் ரசித்துள்ளேன்.


ஓவியமானது மனநிறைவுடன் கூடிய பொழுதுபோக்கு மாத்திரமல்ல, வருமானத்தையும் நமக்குப் பெற்றுத் தரக்கூடிய துறையாகவும் விளங்குகின்றது.

 நமது கரங்களால் ஓவியம் வரைந்து அது மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தினால் அந்த இன்பத்திற்கு எல்லைகள் வகுக்கமுடியாது.


இன்று நாம் காணும் இந்த ஓவியத்துறையானது பல தசாப்தங்களில் பல்வேறு பரிமாணங்களைத் தாண்டி வந்துள்ளன. பல வரலாறுகளைக் கொண்டுள்ளன. கண்களால் ஓவியங்களைப் பார்க்கும் போது நம்மனக்கவலைகளை உறிஞ்சி நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் சக்தி இவ் ஓவியத்திற்கு இருக்கின்றது
நான் ரசித்த சில ஓவியங்களை நீங்களும் ரசித்திருப்பீர்கள்  மகிழ்ச்சியே !


இதில் என் கைவண்ணமுள்ளது. விரும்பினால் இதனை அழுத்திப் பாருங்கள்.

- Ms. Jancy Caffoor -

2012/08/13

சத்தியமும் அசத்தியமும்


நம் வாழ்க்கை அற்புதமானது. நம்  வாழ்வின் ஒவ்வொரு  நகர்வும், இயற்கை அருட்கொடைகளுடன் பிண்ணிப்பினைந்துள்ளது. அவ்வியற்கையழகை, தேவையை நிராகரிப்போர் இப்புவியின் மனிதப் பிறவிகள் எனும் அந்தஸ்தைப் இழந்து விடுகின்றனர்.

ஒவ்வொரு படைப்புக்களும் இறைவனால் படைக்கப்பட்டு , அவற்றுக்கான வாழ்வியல்  விதிமுறைகளும்  வகுக்கப்பட்டு, இப் பிரபஞ்சத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அவை உயிருள்ளவை, உயிரற்றவை,சக்தியென பேதப்பட்டவாறே, ஒவ்வொன்றும் தத்தமது இயல்புகளினால் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆனாலும் இவ் வேற்றுமைகளிலும் ஒற்றுமையிருப்பதன் மூலமாக நமது வாழ்விலும் இவை தொடர்புபட்டுள்ளது.

ஆறறிவு படைத்த உயிருள்ள மனிதன் தன் செயல்களினாலேயே தன்சூழலில் வாழும் ஏனைய ஐந்தறிவு  கொண்ட மாக்களிலிருந்தும் வேறுபடுகின்றான். அவனாற்றும் செயல்களில் கலந்துள்ள நன்மை, தீமைகளிலிருந்தே மறுமை வாழ்வுக்கான அத்திவாரமும்  பலமாக இடப்படுகின்றது. நாம் செய்கின்ற செயல்களுக்கான அடித்தளமாக  சத்தியமும், அசத்தியமுள்ளடங்குகின்றன.  செயல்களினடிப்படையில் நம்மை இனங்கண்டு, இயற்கையுடன் உவமித்து ஏகவல்ல இறைவன்  அருளிய பல திருவசனங்களை அல்குர்ஆன் தன்னகத்தை ஏந்தியுள்ளது. அவற்றுலொன்று -


"வானத்திலிருந்து நீரை அவன் இறக்கினான் பின் ஓடைகள் அளவுக்குத்தக்கவாறு  (நீரைக் கொண்டு)ஓடின. பிறகு வெள்ளம் ( நீருக்கு மேல் மிதக்கும்) நுரையை மேலே சுமந்து சென்றது. (இதுபோன்றே) ஆபரணங்களையோ அல்லது சாமான்களையோ செய்வதற்காக நெருப்பில் அவர்கள் (உலோகங்களை) உருக்குவதிலிருந்தும், அதுபோன்று நுரை உண்டாகின்றது. இவ்வாறே சத்தியத்தையும், அசத்தியத்தையும் அல்லாஹ்  உதாரணமாகக் கூறுகின்றான். எனவே (அழுக்கு) நுரையோ வீணாகிப் போய்விடுகிறது. (ஆனால்) மனிதர்களுக்கு பலன் அளிக்கக்கூடியதோ பூமியில் தங்கிவிடுகிறது. இவ்வாறே (நிராகரிப்போரை அழுக்கு நுரைக்கும், விசுவாசிகளைப் பூமியில் பயன் தரும் பொருட்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் உவமைகளை விவரிக்கின்றான் ( 13:17)









2012/08/12

திருமறை



"மேலும் உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஹிக்மத் ( எனும் சுன்னத்தை ) தையும் நினைவுகூறுங்கள்.( அவற்றின் மூலம் உபதேசம் அடையுங்கள் ) நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவனாக                       

( யாவையும் )  நன்கறிந்தோனாக இருக்கின்றான்"  (33:34)


"நிச்சயமாக  அல்லாஹ்வுடைய  வசனங்களை விசுவாசிக்கவில்லையே  அத்தகையோர்  அவர்களை , அல்லாஹ்  நேர்வழியில்  செலுத்த  மாட்டான்.  அவர்களுக்கு  துன்புறுத்தும்  வேதனையுண்டு  "      (16:104)


" இன்னும் விசுவாசங்  கொண்டு  நற்காரியங்களையும்  செய்கின்றார்களோ ,  அத்தகையோர்  அவர்கள்  சுவனவாசிகள், அதில்  அவர்கள்  நிரந்தரமாக (த்தங்கி ) இருப்பார்கள் "                                                          (2:82)


" நிச்சயமாக  அல்லாஹ்வுடைய  வசனங்களை  விசுவாசிக்கவில்லையே  அத்தகையோர்  அவர்களை  அல்லாஹ்  நேர்வழியில்  செலுத்த மாட்டான் , அவர்களுக்கு  துன்புறுத்தும்  வேதனையுண்டு "          (16 : 104)



" உங்களிடமுள்ளவை ( யாவும் ) தீர்ந்து  விடும் , அல்லாஹ்விடம் உள்ளதோ நிலைத்திருக்கும், பொறுமையைக்  கடைப்பிடித்தோர்க்கு  அவர்களுடைய கூலியை  அவர்கள்  செய்து  கொண்டிருந்தவற்றில்  மிக  அழகானதைக்  கொண்டு  திண்ணமாக  நாம்  வழங்குவோம்  "               (16 : 96) 



" ( மனிதர்களே ) நீங்கள்  வறுமைக்குப் பயந்து  , உங்கள்  குழந்தைகளைக்  கொலை  செய்யாதீர்கள்.  அவர்களுக்கும் ,  உங்களுக்கும்  நாமே  உண​வை
( வாழ்க்கைத்  தேவைகளை  )  வழங்குகின்றோம். நிச்சயமாக  அவர்களைக் கொலை  செய்வது  பெரும்  குற்றமாக  இருக்கின்றது "  (17 :31 )


" விசுவாசங் கொண்டோரே ,உங்கள்  வீடுகள் அல்லாத (வேறு) 
வீடுகளில்  (நீங்கள் நுழைய அவசியம் ஏற்பட்டால், அவ் வீடுகளில்  உள்ளவர்களிடம் ) நீங்கள்  (மூன்று  முறை ) அனுமதி  கோரி, அவ்வீடுகளில்  உள்ளோருக்கு  ஸலாம் கூறாதவரை அவற்றில் ) நுழையாதீர்கள் இவ்வாறு நடந்துகொள்வ) துவே  உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்  நீங்கள் நல்லுபதேசம்  பெறும்  பொருட்டு  ( இது  உங்களுக்குக் கூறப்படுகின்றது "  ( 24 : 27 )


அடுத்த பக்கத்திற்குச் செல்க

திருமறையின் அருள் மொழிகள் சில



இயற்கையின் அற்புதப் படைப்புக்களில் வானமும் பூமியும் அடங்கும். அவற்றிலுள்ள சிருஷ்டிகளைப் பற்றி எம் மனம் ஆராயும் போது வியப்புக்கள் தான் மனதை வளைத்துப் பிடிக்கின்றன. ஆகாயத்திலே தொங்கிக் கொண்டிருக்கும் மிக அதிக எடையுள்ள சூரியனும், சந்திரனும், உடுக்களும், கோள்களும், ஏனைய வான் பொருட்களும் அவற்றின் அமைப்புக்களால் நம்மை வியப்பூட்ட, மறுபுறம் பரந்து நிற்கும் இப் பிரபஞ்சமும் அதனை நிறைத்திருக்கும் உயிரினங்களும், உயிரற்றவைகளும் நம்முள் ஆச்சரியங்களாக மாறுகின்றன.

அல்லாஹ்வின் இச் சிருஷ்டி பற்றி இறக்கப்பட்டுள்ள திருமறை வசனங்களுள் இவையும் சிலவாகும் ...........

"நிச்சயமாக அல்லாஹ்(தான்) வானங்களையும், பூமியையும் உண்மையாக க்கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை (மனிதனே)நீ பார்க்கவில்லையா! அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வந்தும் விடுவான் "        (14:19)


"வானங்களிலும், பூமியிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியன,இன்னும் முன்னிரவிலும், நடுப்பகலை அடையும் சமயத்திலும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்)   (30:18) 


"ஆகவே, (விசுவாசிகளே) நீங்கள் மாலைப்பொழுதை அடையும் போதும், காலைப்பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருங்கள்"  (30:17)


--------------------------------------------------------------------------------------

"வானவெளியில் (அல்லாஹ்வின் கட்டளைக்குக்) கட்டுப்பட்டவையாக 

( பறந்து செல்லும் ) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா அல்லாஹ்வைத் தவிர ( வேறொரு வரும் ) அவற்றை தடுத்து நிறுத்தவில்லை நிச்சயமாக விசுவாசங் கொண்ட சமூகத்தார்க்கு இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன " (14:79)


"நிச்சயமாக அல்லாஹ்.அவனை வானங்களிலும், பூமியிலும் உள்ளவைகளும் ( தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக பறவைகளும் துதி செய்து கொண்டிருக்கின்றன என்பதை ( நபியே! ) நீ காணவில்லையா! 
( இவற்றில் ) ஒவ்வொன்றும் தன் தொழுகையையும் , அவனைத் துதி செய்யும் முறையையும் திட்டமாக அறிந்திருக்கின்றன. மேலும் அல்லாஹ் இவைகள் செய்பவற்றை நன்கறிந்தவன்" (24:41)

---------------------------------------------------------------------------------------

மேலும், மலைகளிலும், மரங்களிலும் அவர்கள் கட்டுபவைகளிலும் நீ கூடுகளை அமைத்துக்கொள்" என்று உமதிரட்சகன் தேனீக்களுக்கு உள்ளுணர்ச்சிகளை உண்டாக்கினான் .  (16:68)


---------------------------------------------------------------------------------------

"பேரீச்சை, திராட்சை (ஆகிய) பழங்களிலிருந்து மதுவையும், அழகான உணவையும் நீங்கள் எடுத்துக்கொள்கின்றீர்கள் , நிச்சயமாக இதிலும் அறிகின்ற கூட்டத்தினருக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது"     (16:68)


------------------------------------------------------------------------------------------

"பின்னர், நீ எல்லா விதமான கனி(யின் மலர்) களிலிருந்தும் உணவருந்த பின்னர், உனதிரட்சகனின் வழிகளில் ( அவை உனக்கு ) எளிதாக்கப்பட்டதாக இருக்கச் செல்"  ( எனவும் உணர்வை உமதிரட்சகன் உண்டாக்கினான் ) 
இதனால்  அதன்  வயிறுகளிலிருந்து  (தேனாகிய)  ஒருபானம் வெளியாகின்றது. அதன் நிறங்கள் மாறுபட்டவையாகும். அதில் மனிதர்களுக்கு  குணப்படுத்தலுண்டு.  நிச்சயமாக,  இதிலும் சிந்திக்கக்கூடிய கூட்டத்தினருக்கு  ஒரு அத்தாட்சி  இருக்கின்றது"  (16:69)