About Me

2014/07/25

சிலேடை




சிரிக்க சிந்திக்க சிலேடை
---------------------------------------
ஒருமுறை ரெட்டியாரும், ஊற்றுமலை அரசரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தலை நிறைய பூவுடன் அரசி அங்கே வந்தாள்.

அவளைக் கண்டதும் "தங்கச்சி வந்தியா" என அன்பாக ரெட்டியார் கேட்டார்.

அவர் அப்படி கேட்டதும் அரசனுக்கு அது பிடிக்கவில்லை. அரசியை தங்கச்சி என விளிக்கின்றாரே என அரசர் முகவாட்டம் அடைந்தததை புலவரும் காணத் தவறவில்லை.

அரசியாரே! தங்கள் தலையில் சூடியிருப்பது தங்கச் சிவந்தியா எனக் கேட்டேன்.....

என பேச்சை மாற்றினார் ரெட்டியார்.....


அனாதை மனம்



அன்பைச் சிந்தி
ஆரோக்கியம் காத்து
இன்முகத்தினுள் தம் துன்பம் மறைத்து
ஈகைவாதிகளாய்- இரத்த
உறவுகளால் கைவிடப்பட்ட
பெரியவர்கள்

அனாதைகளுக்கும்கூட
எங்கோ ஓர் சத்திரமுண்டு!
அங்கும்கூட புது உறவுகள்
கிடைப்பதுமுண்டு!

- Jancy Caffoor-
      25.07.2014

முகநூல் எண்ணங்கள் - 6



சம்மட்டி.....
கல் பிளக்கும் - ஆனால்
பஞ்சு பிளக்காது.....!

வெயில்.....
மலையை உடைக்கும்  - ஆனால்
குடையை உடைக்காது!

வாழ்வில் வரும் துன்பம்
மனதைக் கரைக்கும் - ஆனால்
தன்னம்பிக்கையைக் கரைக்காது!

உண்மையில்.....

தடைகளை உடைத்து
கண்ணீரை உலர்த்துவதே
தன்னம்பிக்கையின் செயலாய் உள்ளது!

----------------------------------------------------------------------

வெறும் பாறையாய்தான் இறுகிக் கிடந்தேன்...
உருக வைத்தாய் உன் பார்வையால்....
இறுதி வரை தொடருமோ
மாசற்ற உன் னன்பு!

---------------------------------------------------------------------

சில சந்தர்ப்பங்களில் ஒருவரின் .....

மௌனம் என்பது நிசப்தங்களின் ஓசையல்ல...
சொல்ல முடியாத உள்ளத்துணர்வுகளின் அலறல்!

இதனைப் புாிதல்......
அன்பின் அங்கீகாரம்!

பிாிதல்.....
புரிந்துணர்வின்மையின் அகங்காரம்!

----------------------------------------------------------------------

முடியாது என்பது பலவீனர்களின் அறியாமை!
முடியும் என்பது வெற்றியாளர்களின் நம்பிக்கை....!

இந்த நம்பிக்கைதான் ....
என் தன்னம்பிக்கையின் ஆணிவேர்!

----------------------------------------------------------------------

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்....

நம் மனம் விரும்பும் பட்சத்தில் தடைகள்கூட உடைந்து
வழி விடும்....

விரும்பாத பட்சத்தில் ...

வழிப்பாதைகள் கூட தடைக்கல்லாய் மாறி
நம்மை நிறுத்தும்!

நம் செயல்களின் ஆணை யாவும்
மனதிலிருந்தே!
ஆனால் நாமோ...
தோல்வியின் இறுக்கத்தில் விதியை சபிக்கின்றோம்
நம் சதியை மறைத்து!

------------------------------------------------------------------------

அன்பு ஒரு உணர்வல்ல.....
இதயம் பேசும் மொழி!

ஆனால்....

அது பலருக்குப் புரிவதில்லையாதலால்
பிரிவைத் தேடிப் போகின்றனர்...

------------------------------------------------------------------------

நம் வசம் இருக்கின்றபோது பெறுமதியற்று போகின்ற ஒவ்வொன்றினதும் பெறுமதி அதன் இழப்பின்போதுதான் வலியாய் மனதைக் குடைகின்றது!






முகநூல் துளிகள் - 5




நம் ஒவ்வொருவரிடமும் உள்ள திறமைகளை உரிய நேரங்களில் பொருத்தமான சந்தர்ப்பங்களில் வௌிப்படுத்தும்போது, பிறருக்கு நம் தனித்துவம் அடையாளப்படுத்தப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி........

நம்மிடமுள்ள நல்ல விடயங்களை நாமே , ஆராய்ந்து , தவறுகளைத் திருத்தி நம்மை மீண்டும் மீண்டும் உருத்துலக்கி நமக்கே உரித்தான பயணப்பாதையில் பயணிக்கும்போதுதான் வெற்றி நம் வசமாகின்றது!

-------------------------------------------------------------------------

பிடிக்கின்ற சண்டைகளெல்லாம்
ஓரிரு நிமிடங்களில் கற்பூரமாய்.....
கரைந்து மறைந்து விடுகின்றது உண்மை அன்பில்!

------------------------------------------------------------------------

வலிகள் எல்லாம் வெற்றியின் வழிகளென்றால்..
ஔிமயமான எதிர்காலத்திற்காக எத்தனை துன்பங்களையும் தாங்கலாம்!

-----------------------------------------------------------------------

அன்பு என்பது வெறும் உணர்வல்ல....
அர்ப்பணிப்பு!
தாம் நேசிப்பவர்களை உண்மை அன்புடன் நோக்கும்போது, அங்கு அர்ப்பணிப்பும் இயல்பாக ஊடுறுவி விடுகின்றது...

-----------------------------------------------------------------------

எதிர்பார்ப்புக்களையும் கடந்ததுதான் உதவி...
ஆனால்....
லேசில் கிடைக்கின்ற எந்தவொரு உதவியையும்
லேசில் மறந்து விடுவார்கள் உதவி பெற்றவர்கள்!
இதுதான் உலக நடப்பு!!

-----------------------------------------------------------------------

நல்லது செய்து தோற்றால்
அதுகூட வெற்றியின் விளிம்பே!
சந்தோஷம் அப்போதும் தேடி வரும்!
ஏனெனில்........
தோல்வி என்பது சிறந்த உழைப்பிற்கான ஓர் செய்தி!

------------------------------------------------------------------------

ஒருவரின் மனவலிமையின் அளவுதான் அவர் சந்திக்கும் சம்பவங்களை சாதனைகளாக மாற்றும் உந்துசக்தியாக அமைகின்றது...

------------------------------------------------------------------------


வட்டத்தின் தொடக்கப்புள்ளிதான் குற்று...
குற்றுக்கள் பல சேர்ந்தால் அதன் இறுதிச் சேர்க்கை வட்டம்......

நட்புக்கள் அல்லது உறவுகளுக்கிடையே ஏற்படும் சின்னச் சின்ன விடயங்களின் முரண்பாடுகள்தான் பெரிதாகி, பலரின் வாழ்க்கை மையத்தின் அச்சாணியாம் நிம்மதியை உடைத்து விடுகின்றது!

எனவே.....

தேவையற்ற விடயங்களை மனதில் ஏற்றி மன அழுத்தங்களுக்கு உள்ளாகாமல் இயல்பாக வாழ பழகிக் கொண்டால், நிம்மதியும் சந்தோஷமும் நம்மை விட்டு நீங்காது!

-------------------------------------------------------------------------


முரண்பாடுகளிலும்
உடன்பாடு கண்டு....
உதிரம் தோறும் பொறுமை கலந்து...
உயிரெங்கும் அன்பைத் தோய்த்து
வாழும்போது...

நம்பிக்கைச் சாரளம் மெல்ல திறக்கும்
கனவுகள் மெய்ப்பட வழி காட்டி...

வைரமாய் ஜொலிக்கும்
நம் வாழ்க்கையில்...
சருகுகளாய் கவலைகள் எதற்கு...

அடடா.....

வாழ்க்கை வாழ்வதற்கே!
வாழ்ந்துதான் பார்ப்போமே!

--------------------------------------------------------------------

அவசரம் ஓர் உணர்ச்சிப் பிழம்பு...
நம் அவசரங்களில் பல அவசியங்கள் காணாமல் போய் விடுகின்றன!

--------------------------------------------------------------------




தன் மூச்சுக் காற்றுக்குள்ளும் பாசமூட்டி
கருப்பைக்குள்ளும் நம்மை....அரவணைத்து
தரணிக்கு அர்ப்பணிக்கும் அன்பு....
அம்மா!

--------------------------------------------------------------------


என் பூப்போன்ற கண்களில்
கவிழ்ந்து கிடக்கும் உன்மீதான அன்பை
அவிழ்த்து விடுகின்றேன்.....
நீயே அறியாம லிப்போது!

--------------------------------------------------------------------



உன துரு என் கனவுகளில் கலக்க
இரவு கரைவதே தெரியாமல்........
விழித்திருந்தேன் உன் நினைவுகளுடன்!
--------------------------------------------------------------------

உருவம் பார்த்து பழகும் உள்ளம்
ஊனம் வடியும் மாசு பள்ளம்!

--------------------------------------------------------------------

சூழ்நிலைக் கைதிகள் நாம்...
அதனாற்றான் சூழ்நிலைகள் நமக்குச் சாதகமாக இல்லாவிடில், அந்த மன அழுத்தத்தை நம்மைச் சார்ந்தோர் மீது திணித்து விடுகின்றோம்.





இனவாதம்



ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். உண்மையில் இனவாதத்தைத் தூண்டும் சகலரும் தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் மட்டும் நோக்கும் மனநோயாளிகள். ஏனெனில் அவர்களிடம் மனிதம் இருப்பதில்லை.

ஒரு சிறுபான்மைச் சமூகம் தன் கலாசார, பொருளாதார, உறவுகளால் சூழப்பட்டிருக்கும் தனது பிரதேசத்தில் தனித்துவத் தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதனை சகிக்காத சில பெரும்பான்மை இனவாதியினர் இனவாத அடக்குமுறையை அச்சிறுபான்மையினர்மீது திணிக்கும்போது, உலகத்தில் வாழும் மனிதம் நிறைந்த ஏனைய மக்கள் எல்லோரும் கண்மூடிக் கொண்டிருப்பார்கள் என நினைக்கின்றார்கள் போல!

இன்று தகவல் தொழினுட்ப அறிவினால் உலகம் கிராமமாகச் சுருங்கி விட்டது. ஒரு தேசத்தின் சகல விடயங்களும் சமுத்திர எல்லைகள் கடந்து ஒரு நொடியில் உலகம் முழுதும் பரவி விடக் கூடிய இந்தக் கால கட்டத்தில் இனவாதிகளின்  செயல்கள் உலகமெங்கும் உடனடியாகவே வௌிச்சமிடப்பட்டு காட்டப்படுகின்றன.

1990ம் ஆண்டளவில் வடபகுதி முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக அவர்கள் தாயகத்திலிருந்து விரட்டப்பட்டபோது, அத்தகவல்கள் உலக மக்களின் பார்வைக்கு அன்றே எத்தி வைக்கப்படவில்லை.அதனால் இன்றும் அந்த மக்கள் அகதி அவலத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆனால் .....

பேருவளை , அழுத்கம சம்பவங்கள்.....

அம்முஸ்லிம் மக்களின் கண்ணீர்த்துளிகளை ஈரம் காயமுன்னரே உலகின் பார்வைக்குள் பரவ விட்டதால் இனவாதிகளின் குரோதம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.. இலங்கையில் சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் எனும் மனப்பதிவுகள் மீண்டும் புதுப்க்கப்பட்டு விட்டது.

அன்று  தமிழ் மக்கள்  இன வன்முறைக்கு    உட்பட்டபோது  பூகோளத்தில் வாழும் ஏனைய தமிழ்மக்களின் தமிழ்ப்பற்றும் அவர்களின் ஒற்றுமையும் ஆதரவும் இன்றுவரை இப்பிரச்சினையை சர்வதேச அரங்கிற்குள் உலாவவிட்டுக் கொண்டிருக்கின்றது..

அவ்வாறே முஸ்லிம் மக்களின் உயிர், உடல், உடமை பாதுகாப்புக்கு முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இப்போது குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பதும், முஸ்லிம் சில அரசியல்வாதிகளுக்கு இல்லாத சமூகப்பற்று முஸ்லிம் இளைஞர்களிடம் அதிகரித்து வருவதும் ஆரோக்கியமான விடயம்....

"எதிரியின் எதிரி நண்பன்' எனும் மனப்பாங்கில் மொழியால் ஒன்றிணைந்தவர்கள் தற்போதைய சூழ்நிலையை மையப்படுத்தி தம் குரோதத்தை வௌிப்படுத்துவதும் அநாகரிகமான மனிதாபிமானமற்ற செயலே!

உண்மையில் மொழியால் ஒன்றிணைந்த சிறுபான்மையினர் தமக்கெதிரான வன்முறைகள் அவிழ்த்து விடப்படும்போது அவற்றை எதிர்த்து மனவலிமையுடன் ஒன்றாக இணைந்து போராடுவதே காலத்தின் தேவையாகி நிற்கின்றது..