About Me

2014/07/25

சிலேடை




சிரிக்க சிந்திக்க சிலேடை
---------------------------------------
ஒருமுறை ரெட்டியாரும், ஊற்றுமலை அரசரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தலை நிறைய பூவுடன் அரசி அங்கே வந்தாள்.

அவளைக் கண்டதும் "தங்கச்சி வந்தியா" என அன்பாக ரெட்டியார் கேட்டார்.

அவர் அப்படி கேட்டதும் அரசனுக்கு அது பிடிக்கவில்லை. அரசியை தங்கச்சி என விளிக்கின்றாரே என அரசர் முகவாட்டம் அடைந்தததை புலவரும் காணத் தவறவில்லை.

அரசியாரே! தங்கள் தலையில் சூடியிருப்பது தங்கச் சிவந்தியா எனக் கேட்டேன்.....

என பேச்சை மாற்றினார் ரெட்டியார்.....


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!