About Me

2020/08/07

பிரியாத நிலாக்கள்

பிரிய நிலாக்களின் பிஞ்சு விழிகளில்./

பிறைக்கீற்றாய் வீழ்கின்றதே சோகங்களும் விழிநீரில்/

வெடித்தெழும் துடிப்பினிலே தாயவளும் நினைவிலெழ/

வடிகின்ற ஈரத்தால் அணைக்கின்றான் தங்கையினை/


வறுமை யிடர் பெருகிடும் வாழ்வினில்/

சிறு தொழிலும் செய்திடவே தாயவளும்/

தொலைபோக அழுகின்றாள் சேயிங்கு வருந்தித்தான்/

விலைதானேது பாசத்திற்கே உணர்வும் வயதறியாதே/


அழகான மழலை தெய்வத்தின் அருளே/

அகிலத்தின் பரிவுக்குள்ளும் நிழலும் விரிந்திட/

அழுகின்ற உறவினை அணைத்தே தழுவி /

அன்பைக் குலைத்தூட்டும் பிரியநிலா இவனே/

ஜன்ஸி கபூர்



நிழல் - நவீன கவிதை

நிழல் உண்மையை உணர்த்துகின்றது/

ஒளியின் சத்தியத்தில் உயிர்க்கிறது/

இருளெனும் பொய்மையை மறைக்கிறது/


மனசாட்சிக்கும் மதிப்பளிப்பதனால்/

அது மனிதனுடனேயே எப்போதும் தொடர்கிறது/


வண்ண பேதங்கள் இல்லையதற்கு/

எப்போதும் கருமைதான்/

சமத்துவத்தைக் கற்றுத் தருகின்றது/


சூழ்நிலைக்கேற்ப மாறுகின்றன அதன் அளவுகள்/

மாறுகின்ற மனிதர்களின் மனங்களைப் போல/


உச்சி வெயிலில் பாதணிகளாகவும்/

சுருங்கிக் கொள்கின்றன எமக்குள்/

சந்தர்ப்பங்களைக் கற்றுத்தருவதைப் போல/


பல உருக்கள் அமைத்து/

வித்தைகள் செய்கின்ற விரல்களும்/

முதலீட்டு வணிகப் பொருள்தான்/


இருளையும் ஒளியையும்/

தொடர்புபடுத்தும் நிழல்/

இன்பமும் துன்பமும் ஒன்றித்து வருகின்ற/

வாழ்க்கையை நினைவூட்டுகிறது/


பௌர்ணமி,அமாவாசைகள் கூட/

நிழலின் உணர்ச்சி நிலைகள்தான்/

மனிதனுக்கும் தத்துவமாகின்றன/


வறுமை நிலையில் பயமுறுத்தும்/

உயர்ந்து செல்லும் விலைவாசிபோல்/

சிறு பொருட்களையும் உருப் பெருத்துக்காட்டுகின்றது

நிழல்/


பொய்கள் மெய்யாகலாம்/

மெய்யென்ற மாய நிலைக்குள்

பொய்யும் கலக்கலாம்/


நிழலும் நம்மை நேசிப்பதனாலேயே

கூட வருகின்றது உயிர்போல/


ஜன்ஸி கபூர்-06.08.2020

யாழ்ப்பாணம்


Kesavadhas

ஜன்ஸி கபூர் கவிதை முதற் கவிதை எனக் குறிப்பிடினும் தேர்ச்சி தெரிகிறது!

முதலவரி உண்மையை உணர்த்துகின்றது

என மாற்றி

அடுத்த வரியில் தன்னையே வேண்டாம்!

அதன் பின்னர் கவிதை பேசுகிறது!

வண்ணப் பேதங்கள் இல்லா சமத்துவம்

மனிதர்கள் மனங்கள் போல சூழலுக்கு ஏற்ப மாறுகிறது!

உச்சி வெயில் பாதணிகள்

இன்ப துன்ப வாழ்க்கையை தொடர்ந்து கூடவந்து நினைவூட்டுகிறது!

பௌர்ணமி அமாவாசை உவமங்கள் அருமை!

விலைவாசியோடு ஒப்புமை அழகு!

முடிவும் நன்றே.

வாழ்த்துகள் கவிஞரே!****




2020/08/06

நிழல் - நவீனத்து கவிதை

ஒளியில்லாவிட்டால் நிழலும்

பயந்து 

மறைந்து கொள்கிறது/


மதிய வெயிலுக்கு

நிழல் 

செருப்பாகின்றன கால்களுக்கே/


கைவிரல்களின் நிழல்களும்

ஒளியுள்ளபோது 

வித்தை காட்டிச் சம்பாதிக்கின்றன./


நிலவு மறைப்பில்

பூமியின் நிழல் கண்டு

நிலவும்

கொதிக்கின்றது கோபத்தில்/


கதிரவ மறைப்பில்

நிலவின் நிழல் கண்டே

சூரியனும்

பயத்தில் கண்களை மூடுகின்றதே/


சூரியனைக் கண்டதுமே

எமது நிழல்களும் வழுக்கி வீழ்கின்றன

தரையில்/


தகரத் துளைகளில் விழும்

சிறு ஒளிப்பொட்டின் நிழலும்

புகைகின்றன

ஏழையின் மனக்குமுறலாய்/


A.C.Jancy

மனசுக்குள்ளே பூக்கும் மழை



வானம் தேடும் முகில்கள் கூட்டம்/
தினம் ஊற்றாதோ நீரைத்தான் பூமிக்குள்/
கானம் இசைத்திடுமே குயில்களும் கூதலில்/
மனதும் இசைந்திடுமே ஈரப் பூக்களுடன்/
வான்மழை கண்ட வண்ணமயில் ஆட்டம்/
காண்போர் விழியினில் செருகிடுமே வசந்தத்தை/
வானவில் கோலமும் வண்ணத்திரை விரித்திட/
தானமாய் உதிர்ந்திடுமே வான்மழையும்  வையகத்திற்கே/

ஜன்ஸி கபூர்