About Me

2020/08/06

நிழல் - நவீனத்து கவிதை

ஒளியில்லாவிட்டால் நிழலும்

பயந்து 

மறைந்து கொள்கிறது/


மதிய வெயிலுக்கு

நிழல் 

செருப்பாகின்றன கால்களுக்கே/


கைவிரல்களின் நிழல்களும்

ஒளியுள்ளபோது 

வித்தை காட்டிச் சம்பாதிக்கின்றன./


நிலவு மறைப்பில்

பூமியின் நிழல் கண்டு

நிலவும்

கொதிக்கின்றது கோபத்தில்/


கதிரவ மறைப்பில்

நிலவின் நிழல் கண்டே

சூரியனும்

பயத்தில் கண்களை மூடுகின்றதே/


சூரியனைக் கண்டதுமே

எமது நிழல்களும் வழுக்கி வீழ்கின்றன

தரையில்/


தகரத் துளைகளில் விழும்

சிறு ஒளிப்பொட்டின் நிழலும்

புகைகின்றன

ஏழையின் மனக்குமுறலாய்/


A.C.Jancy

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!