About Me

2020/08/06

மனசுக்குள்ளே பூக்கும் மழை



வானம் தேடும் முகில்கள் கூட்டம்/
தினம் ஊற்றாதோ நீரைத்தான் பூமிக்குள்/
கானம் இசைத்திடுமே குயில்களும் கூதலில்/
மனதும் இசைந்திடுமே ஈரப் பூக்களுடன்/
வான்மழை கண்ட வண்ணமயில் ஆட்டம்/
காண்போர் விழியினில் செருகிடுமே வசந்தத்தை/
வானவில் கோலமும் வண்ணத்திரை விரித்திட/
தானமாய் உதிர்ந்திடுமே வான்மழையும்  வையகத்திற்கே/

ஜன்ஸி கபூர்  
 





  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!