About Me

2020/08/07

பிரியாத நிலாக்கள்

பிரிய நிலாக்களின் பிஞ்சு விழிகளில்./

பிறைக்கீற்றாய் வீழ்கின்றதே சோகங்களும் விழிநீரில்/

வெடித்தெழும் துடிப்பினிலே தாயவளும் நினைவிலெழ/

வடிகின்ற ஈரத்தால் அணைக்கின்றான் தங்கையினை/


வறுமை யிடர் பெருகிடும் வாழ்வினில்/

சிறு தொழிலும் செய்திடவே தாயவளும்/

தொலைபோக அழுகின்றாள் சேயிங்கு வருந்தித்தான்/

விலைதானேது பாசத்திற்கே உணர்வும் வயதறியாதே/


அழகான மழலை தெய்வத்தின் அருளே/

அகிலத்தின் பரிவுக்குள்ளும் நிழலும் விரிந்திட/

அழுகின்ற உறவினை அணைத்தே தழுவி /

அன்பைக் குலைத்தூட்டும் பிரியநிலா இவனே/

ஜன்ஸி கபூர்



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!