பஞ்சுக் கன்னமதை அன்பால் வருடி/
பிஞ்சு விரல்களுக்குள் தாய்மையைக் கோர்த்தே/
நெஞ்சத் தூளியாக தன்னையே மாற்றி
நெற்றியில் இதழ்களால் முத்தங்களை வரைந்தே/
அன்னையும் இசைத்திடும் பாசத் தாலாட்டில்
அன்பின் சுவைதனை குழந்தையும் அறிந்திடுமே
ஜன்ஸி கபூர்
பஞ்சுக் கன்னமதை அன்பால் வருடி/
பிஞ்சு விரல்களுக்குள் தாய்மையைக் கோர்த்தே/
நெஞ்சத் தூளியாக தன்னையே மாற்றி
நெற்றியில் இதழ்களால் முத்தங்களை வரைந்தே/
அன்னையும் இசைத்திடும் பாசத் தாலாட்டில்
அன்பின் சுவைதனை குழந்தையும் அறிந்திடுமே
ஜன்ஸி கபூர்
எல்லைக் குறுக்கீடின்றியே எழுகின்ற சிறகுகளெல்லாம்/
தழுவுகின்றனவே தம்மினங்களை தடமாகின்றதே சரணாலயமும்/
வேற்றுமையை வேரறுக்கும் வேடந்தாங்கல் பறவையொலி/
படர்கின்றதே சங்கீதமாகப் பரவசம் மனங்களுக்கே/
அடர்ந்த மரக்கிளைகளில் அழகான உயிர்ப்புக்கள்/
அழகான அன்பினை அகிலமும் ரசிக்குமே/
ஜன்ஸி கபூர்
பாரினை ஆளும் பணமும் நிலையற்றதே/
பத்தும் செய்யும் பஞ்சமாபாதக வித்திது/
பரபரப்பு வாழ்வில் பாசத்தையும் துறக்கும்/
பதுக்கிடும் போதெல்லாம் பறித்திடுமே நிம்மதியை/
பாதாளம் பாய்ந்து பண்பதனை மாற்றும்/
பலவழிகளிலும் தேடிடவே பம்பரமாகச் சுழற்றுமே/
ஜன்ஸி கபூர்
சுட்டெரிக்கும் வெயிலும் தேகத்தைப் பருகிட/
வாட்டமே வாழ்வாகத் தேயிலைத் தோட்டத்தில்/
பறித்திடும் கொழுந்தும் சிவக்குதே ஏழ்மையில்/
அறிந்திடாக் கபடத்தில் வாழ்வும் பலியாகுதே/
பஞ்சத்தில் வெந்திடும் நெஞ்சத்தின் ஏக்கத்தை/
அஞ்சாமல் சுரண்டிடுதே வஞ்சக முதலைகள்/
தொழிலாளி நலத்தை விழுங்கிடும் முதலாளித்துவம்/
தொல்லைமிகு அட்டையாக உழைப்பையும் உறிஞ்சுகிறதே/
ஜன்ஸி கபூர்