About Me

2021/04/22

தாலாட்டு

 

பஞ்சுக் கன்னமதை  அன்பால் வருடி/

பிஞ்சு விரல்களுக்குள்  தாய்மையைக் கோர்த்தே/

நெஞ்சத் தூளியாக தன்னையே மாற்றி  

நெற்றியில் இதழ்களால்  முத்தங்களை வரைந்தே/

அன்னையும் இசைத்திடும் பாசத் தாலாட்டில்

அன்பின் சுவைதனை குழந்தையும் அறிந்திடுமே 


ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!