About Me

2019/05/07

இனி

வேகமான கால ஓட்டத்தில் பதவி வழிவந்த பணிச்சுமை மற்றும் வாழ்வியல் போராட்டங்களுக்கு மத்தியில் என் விரல்கள் கணனியில் பதிவிடவில்லை . நீண்ட வெறுமையில் சோர்வும் ஓர் அங்கமாகி போக நாளை            நாளை  என நாட்கடத்தலும் நீண்டது . கிட்டத்தட்ட நாலரை வருடங்கள்! என் கவிதாயினியிலிருந்து விலகியே இருந்தேன். இறுகி கிடந்த என் கற்பனை உணர்வுகளை நட்பு வட்டம் மெல்ல மெல்ல கிளற ஆரம்பிக்க, தூசு தட்டினேன் இவ் வலைப்பூவை !

எதை எழுதுவது .....................எப்படி எழுதுவது ...................?

எல்லாமே மௌனித்த உணர்வு.  நான் மாறிவிட்டேனா! இயல்பான வாழ்வியல் சிந்தனைகளை நசுக்கி விட்டதா? ஆனாலும் ஏதோ நான் எழுத வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும் நான் நேசித்த என் கலைக்காகவேனும்  எழுத வேண்டும். மீண்டும் நான்  நானாக, என் கலையாக மாறவேண்டும் !

அந்த ஏவல் என் உணர்வுகளுடன் கசிய தொடங்கியவுடன் விரல்களும் விசைப் பலகையுடன் பேசத்தொடங்கியது மழலையாய். ஒரு கலைவாதி மௌனிக்கலாம். ஆனால் மறைந்து விடுவதில்லை. இனி தினமும் என் கவிதாயினியை நான் தரிசித்து போவேன்.

- Ms. Jancy Caffoor -
   07.05.2019

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!