About Me

2019/05/23

வறுமை



வாழ்க்கை கதவு தட்டப்படுகிறது
வாசலில் வறுமை !

ஏழைப் பாறைக்குள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்  பெயரை !

மனம் கிழிந்து போனது
துவாரங்களில் வறுமை!

என் வறுமைத் தீயில்
கடன் கருகிக்  கொண்டிருக்கின்றது  !

பசியின் ஆக்கிரமிப்பில்
கண்ணீர் சிறைபடுகின்றது  !

மழை விரட்டிக்கொண்டிருக்கிறது
 வெள்ளத்தை வீட்டுக்குள்!

அடுக்களையை நுகர்ந்து பார்க்கிறேன்
ஏக்கப் புகை வாசம்!

சட்டை க் கிழிசல்கள்
சாட்டை அடிக்கின்றன தேகத்தை !

உணவின் வாசம் மாத்திரமே
சுவாசத்தின் வாசலில் !

கனவுச் சாளரத்தின் கம்பிகள்
துருப் பிடித்துக்  கொண்டிருக்கின்றன !

 மருதாணி சாறுக்குள்
வீழ்ந்து விட்டதா வாழ்க்கை!

- Jancy Caffoor -

  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!