About Me

2019/06/16

வசந்தத்துளிகள்


எப்பொழுது நாம் பிறரால் மறுக்கப்படுகின்றோமோ, அன்றுதான் நாம் நமது ஆற்றல்களை உணர்ந்து, அவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கின்றோம்!
----------------------------------------------------- 


சனியில் நாங்கள் சட் செய்தோம்
ஞாயிறில் என் ஞாபகத்தில் நீ
திங்களில் முத்தங்களாய் தித்திப்பு தந்தாய் 
செவ்வாயில் திருமண உறுதி தந்தாய்
புதனில் கனவுலகில் புதுமணத் தம்பதியராய் நாம்
வியாழனில் வீட்டுக்கு வந்தாய் திகதி குறிக்க
வெள்ளியில் ........ உள்ளம் திருடிச் சென்றாய்!
----------------------------------------------------- 

ஆடம்பரமான ஹோட்டலில் புரியாணி சாப்பிட்டாலும் கூட, வீட்டுல குடிக்கிற கஞ்சிக்கு ஈடாகுமா

நாம் அடுத்தவருக்காக ஆடம்பரத்துல நாட்டம் காட்டினாலும் கூட, எளிமையிலதான் அதிகமான மகிழ்ச்சி இருக்கிறது.

---------------------------------------------------------- 
பெண்ணின் அழகும் இளமையும் தான் ஒவ்வொரு ஆணிணதும் உணர்ச்சியைக் கிளரச் செய்து அவளைத் திரும்பிப் பார்க்கச் செய்கின்றன!

ஆனால் அவளின் அன்பே அவன் வாழ்வை என்றும் முழுமையடையச் செய்கின்றன!
------------------------------------------------------ 



காதல் ஒரு வார்த்தைதான். ஆனால் அன்பின் முழு இராய்ச்சியமும் அதில்தான் அடங்கிக் கிடக்கின்றது!
------------------------------------------------------- 

பாம்பாட்டி மகுடி ஊதும்போது, பாம்பும் ஆடும்.
அது மகுடிக்காகவா!
இல்லையென்கிறது ஆராய்ச்சி!
பாம்பாட்டியின் உடல் அசைவைப் பார்த்துதான் பாம்பும் ஆடுதாம். என்ன உங்களுக்கும் பாம்பு போல ஆட ஆசை வந்திருக்குமே!

நான் சொல்ல வந்த விசயம் இதுதான்
ஒருவருடைய வீட்டுச் சூழலும், சமுகப் பின்னணியும் தான் அவருடைய முழு செயல்களையும் செய்கிறது. நீங்க தப்பு செய்தா உங்கள ஏசக் கூடாது. ஏனென்றால் அது பலனளிக்காது. அதனால உங்க அம்மா, அப்பாவத்தான் ஏசணும், நீங்க வளர்ந்த சூழலைத்தான் ஏசணும்.

ஆக நல்லவங்க தன்னை சுற்றியிருக்கிறவங்களுக்கு கெட்ட பெயர் வாங்கித் தரமாட்டாங்க..தவறுகளும் செய்ய மாட்டாங்க. அறியாம செய்தா திருந்திடுவாங்க.


- Ms. Jancy Caffoor -
   16.06.2019

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!