About Me

2021/04/10

இரங்கல்

 

பிறப்பில் உற்பத்தியாகும் மனித உயிர்கள் இறப்பு எனும் புள்ளியைத் தொடுவது இயல்பான வாழ்ழ்க்கையின் நியதிதான் என்றாலும்கூட அந்த மரணங்கள் விட்டுச் செல்கின்ற சோகங்கள் ஆற்றமுடியாமல் கனக்கின்றன. சோகங்களுக்கு அரசன், ஆண்டி பேதங்கள் தெரிவதில்லை. வலியின் வலிமை இழப்புக்களின்போதே தொட்டுப் பார்க்கின்றன.  அமைதி எட்டிப் பார்க்கின்ற அந்த மௌன நிலையிலேயே அவர்கள் பற்றிய கடந்த கால நினைவுகள் பலராலும் மீட்டப்படுகின்றன. 

 உலக அளவிலும் அன்பைப் பெற்ற, பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த எடின்பரோ கோமகன் அவர்களின் மறைவுச் செய்தி நம் காதுகளை எட்டியுள்ளது. 

மாட்சிமை பொருந்திய இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி.

 


ஜன்ஸி கபூர் - 10.04.2021

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!