About Me

Showing posts with label அறிவோம். Show all posts
Showing posts with label அறிவோம். Show all posts

2021/05/31

Jeff Bezos



மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற உத்வேகத்தில் தமது நகர்வுகளை முன்னெடுக்கின்றனர். நமது முன்னேற்றமானது முயற்சியிலும், ஆற்றலிலும், தன்னம்பிக்கையிலும், அதிஷ்டத்திலும் தங்கியுள்ளது. சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் உதிக்க ஆரம்பிக்கையிலேயே, அத்திசையிலேயே நாமும் பயணிக்க ஆரம்பித்து விடுகின்றோம். செல்வத்திலும் சரி, செல்வாக்கிலும் சரி நாம் முன்னேற வேண்டுமானால், நமது கண்முன்னே வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற முன்மாதிரிகளை நாமும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். 

அந்த வகையில் உலகின் தலைசிறந்த பணக்காரர்களின் வாழ்வினை நாம் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

யார் அவர்கள்......................

 

Jeff Bezos

இவர் 57 வயதானவர். உலகின் பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றார். 1994 ஆம் ஆண்டில் அமேசான் எனும் நிகழ்நிலை வர்த்தக நிறுவனத் தலைவர்.

இவரின் சொத்தின் பெறுமதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

$177 billion இலும் அதிகம் எனக் குறிப்பிடுகின்றார்கள்.

நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத பணத் தொகைதானே இது.

ஒவ்வொரு சாதனையாளர்களையும் நாம் நோக்கினால் அவர்களின் உயர்வின் பின்னணியில் கடுமையான உழைப்பு இருக்கும்.

இவரிடமும் அக்குணம் இருந்தது. ஆன்லைன் புத்தக விற்பனை செய்யும் ஆர்வமே இவரது சிந்தனையில் முதன்முதலாக ஏற்பட்டதாம். 

அதனை தனது முதலாளியான டேவிட். ஈ. ஷாவிற்கு கூறியபோது, அவர் ஆர்வம் காட்டவில்லையாம். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. அமேசன்.காம் எனும் நிறுவனத்தை நிறுவினார். 

இது உலகில் முதல்தர சில்லறை விற்பனைக்குப் பெயர் போனது. பின்னர் 2017 ஆம் ஆண்டில் உணவுகளையும், 2018 ஆம் ஆண்டில் மருந்துகளையும், விற்பனை செய்கின்ற நிறுவனமாக இதன் விரிவாக்கம் பரவிச் சென்றது எனலாம். இன்று பல பொருட்களின் முதற்தர விற்பனை மையமாக இந்நிறுவனம் பூமியில் தரித்துள்ளது.

 அமேசானின் பங்கு விலை ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான அதிகரித்த தேவையை உயர்த்தியதால், நுகர்வோர் வீட்டிலிருந்தே கொள்வனவு செய்யும் நடைமுறை உருவாக்கப்பட்டது. இன்றைய கொவிட் அலையின் மிக வேகமான பரவலின்போது நடைமுறையிலிருக்கின்ற ஆன்லைன் வியாபாரத்தின் முன்னோடி நிலையை இவர் அன்றே உருவாக்கியுள்ளார்.

1999 ஆம் ஆண்டில் பில்கேட்ஸூக்குப் பிறகு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வருமானம் பெறுகின்ற முதல் மனிதராக பெசோஸ் விளங்குகின்றார்.

   


வாஷிங்டன் போஸ்ட் 

மற்றும் 

ப்ளு ஆரிஜின் எனப்படுகின்ற விண்வெளி நிறுவனம் 

   10,000-year கடிகாரம் 

என்பன இவரது அடையாளங்கள் என்றால் மிகையில்லை. 

சிறந்த திட்டமிடலுடன் கூடிய முயற்சி யாவும் வெற்றியின் நிழலிலே அழகாக மிளிர்கின்றது.

ஜன்ஸி கபூர் -31.05.2021    


2021/05/17

image of mars

 The Clearest image of mars ever taken NASA 

Jancy Caffoor - 17.05.2021

(Thank You - Twitter)

2021/05/16

தனிமைப்படுத்தல்


கொரோனா மூன்றாம் அலையின் கோரப் பிடிக்குள் நாம் சிக்கிக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில், நாம் நம்மைப் பாதுகாப்பதன் மூலமாகவே சமூகத்தையும் பாதுகாக்க முடியும். வருமுன் காப்பது நமது ஆரோக்கியத்திற்கான பலம். எனவே சுகாதாரத் துறையினர் அறிவுறுத்திய விதிகளைக் கடைப்பிடிப்பது எமது காலத்தின் தேவையாகும்.

இக்கானொளி தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் பதிவிட்ட கானொளியாகும். இப்படித்தான் இருக்குமென்ற சட்டகத்தினுள் நாம் எம்மை தயார்படுத்தினால் எதிர்பார்ப்புக்கள் மிகையாகாது. நாமும் அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்தலாம்.

இக்கானொளியை ஒரு விழிப்புணர்வாக பகிர்கின்றேன். நம்மைச் சூழவுள்ள நிகழ்வுகளை அறிந்து அதற்கேற்ப நாம் நம்மை இயைபுபடுத்திக் கொள்வது காலத்தின் தேவையாகின்றது.

ஜன்ஸி கபூர் - 16.05.2021


2021/05/09

கொவிட் தொற்றும் கர்ப்பிணித் தாய்மாரும்

இலங்கையில் தற்போது வேகமாகப் பரவி வருகின்ற கொவிட் மூன்றாம் அலையின் பாதிப்பில் தற்போது கர்ப்பிணித் தாய்மாரும் உள்ளடங்கி வருகின்றனர். ஒருவர் மரணித்துள்ள நிலையில் 130 இற்கும் மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிசுவின் துடிப்பினை தன்னுள் ஏந்திக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு தாயும் கொரோனாவின் பிடியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய தேவைப்பாடு உள்ளது.

எனவே கூறப்பட்டுள்ள பின்வரும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

  • அத்தியாவசிய காரணங்களை தவிர வேறு எச்சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள். 
  •  காற்றோட்டமற்ற இடத்தில் தரித்திருப்பதை இயன்றளவு தவிர்த்தல்.
  • எப்பொழுதும் உரியவாறு முகக்கவசத்தை அணிதல்.
  • நபர்களுக்கிடையான தூரத்தை உரியவாறு பேணல்.
  • மரண உற்சவம் போன்ற சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்லாதிருத்தல்.
  • எப்போதும் சவர்க்காரம் இட்டு இரு கைகளையும் கழுவி சுத்தமாக வைத்திருத்தல்.
  • உரியவேளைகளில் கிளினிக்கிற்கு செல்வதிலும் மற்றும் சிகிச்சைகளைப்  பெறுவதிலும், ஏற்படுகின்ற தாமதம்  காரணமாக கர்ப்பிணித் தாயினதும் கருவிலுள்ள சிசுவினதும் ஆரோக்கியத்திற்கு இடையூறு ஏற்படலாம்.

  • கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற காய்ச்சல், குருதிப்பெருக்கு, கடுமையான தலையிடி, மூச்செடுப்பதில் கஷ்டம், பார்வைக் குறைவு, வலிப்பு, நெஞ்சில், வயிற்றில் ஏற்படுகின்ற வேதனை, சிசுவின் துடிப்புக் குறைவு, உடல் வீக்கம், அத்துடன் வேறு ஏதாவது கடினமான அசௌகரிக நிலை ஆபத்து சமிக்கைகளாக அடையாளம் காணப்பட முடியும். இவ்வாறான ஆபத்தான சமிக்கை தோன்றினால் உடன் வைத்தியசாலைக்கு செல்வது கட்டாயமாகும். அது தொடர்பில் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.
  • கர்ப்பிணியான உங்களுடைய பாதுகாப்பு தொடர்பாக,கொவிட் நோய்த் தொற்றிலிருந்து உங்களை  தவிப்பதற்குரிய உரிய சகல ஏற்பாடுகளும்  வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அவசிய வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவேண்டாம்.
  • உங்களுடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொவிட் நோயாளி என சந்தேகிக்கப்படும் நபரொருவர் உங்கள் வீட்டில் வசித்தால் அது தொடர்பாக உடனடியாக உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முடிந்தவரை   அவரிலிருந்து விலகி இருங்கள்.
  • தற்செயலாக, உங்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோணா நோய் அறிகுறி உள்ளதாக சந்தேகித்தால் உடனடியாக உங்கள குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.
  • அவசிய சிகிச்சைகளை உடனடியாகப்பெறுங்கள். வைத்தியசாலைக் கட்டமைப்பு உங்களுக்காக தயார் நிலையில் 
  • இச்சகல நிகழ்வுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல் தோன்ற முடியும். அதை தவிர்ப்பதற்காக, மனதை எப்போதும் நிதானமாகவும் தெளிவாகவும் வைத்திருக்க  முயற்சி செய்யுங்கள்.
  • தேவைப்படும் எந்தநேரத்திலும் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை அல்லது 1999 சுவசெரிய தொலைபேசி சேவையினூடாக வைத்தியரொருவரை தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சனை தொடர்பான காரணங்களை கலந்தாலோசிக்கவும் முடியும்.

- பகிர்வு- 09.05.2021

2021/05/07

முருங்கைக்கீரை ஜூஸ்

பகிர்வு

முருங்கைக்கீரையின் சிறப்பு முருங்கைக் கீரையில் பசலைக் கீரையை விட 25 மடங்கு அதிகமாக இரும்புச்சத்தும், ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிகமாக விட்டமின் சி சத்தும், வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிகமாக பொட்டாசியமும், முட்டையை விட 4 மடங்கு அதிகமாக புரோட்டீனும், கேரட்டை விட 10 மடங்கு அதிகமாக வைட்டமின் ஏ சத்தும், பாலை விட 17 மடங்கு அதிகமாக கால்சியம் சத்தும் உள்ளது.

கொரோனோவில் இருந்து தப்பிக்க உதவும் நெல்லிக்காய் - முருங்கக்கீரை ஜூஸ் :  

செய்வது எப்படி? 

முருங்கை இலையில் அதிக ஆன்டிஒக்சிசன்டுகள் உள்ளன. நெல்லிக்காயுடன் இதனை சேர்த்து சாப்பிடும்போது உடலில் இரும்பு சத்து உறிஞ்சுவது அதிகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக தெரிவித்துள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள், வாரத்தில் இரண்டு மூன்று முறை இந்த ஜூஸ் தயார் செய்து குடிக்கலாம் என கூறியுள்ளனர்.

தேவையான பொருட்கள்:

  • 1/2 டீஸ்பூன் - முருங்கக்காய் பவுடர் அல்லது 5 -10 முருங்கை இலைகள் 
  • 2 - நெல்லிக்காய் 
  • அரை டம்ளர் - தண்ணீர் 

செய்முறை :

  • இந்த ஜூஸை செய்வதற்கு மேற்கூறிய அனைத்து மூலப் பொருட்களையும் ஒன்றாக சேர்க்க வேண்டும். 
  • அரை டம்ளர் தண்ணீரையும் அவற்றுடன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். 
  • பின்னர்  நெல்லிக்காய், முருங்கை இலை, தண்ணீர் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக மைய அரைக்கவும். 
  • தற்போது ஜூஸ் ரெடியாக உள்ளது. 
  • உங்களுக்கு விருப்பம் இருந்தால் அப்படியே குடிக்கலாம். இல்லையென்றால் வடிகட்டி குடிக்கலாம். 
  • தினமும் காலை நேரத்தில் குடிக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 
  • உணவுடன் சேர்த்து குடிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Jancy Caffoor-

2021/04/28

COVID-19 முக்கியமான தகவல்

 

COVID-19 முக்கியமான தகவல்

  • 15-20  நிமிடங்கள் வெயிலில் இருங்கள்

  • குறைந்தது 7-8 மணி நேரம் ஓய்வெடுத்துத் தூங்குங்கள்.
                                                               
  • ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
                                    
  •  அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக அல்ல).
  • கொரோனா வைரஸின் pH 5.5 முதல் pH8.5 வரை இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே வைரஸை அகற்ற நாம் செய்ய வேண்டியதெல்லாம், வைரஸின் அமில அளவை விட அதிகமான கார உணவுகளை சாப்பிடுவதுதான்.

      •   வாழைப்பழங்கள், எலுமிச்சை → 9.9 pH

      •   மஞ்சள் எலுமிச்சை → 8.2 pH
                                            


      •   Avocada fruit - pH 15.6
      •   பூண்டு - pH 13.2
      •   மாம்பழம் - pH 8.7  

      •     ஆரஞ்சு பழம் - pH 8.5 

      •   அன்னாசிப்பழம் - 12.7 pH

      •   ◉ வல்லாரைக் கீரை - 22.7 pH

நீங்கள் குடிக்கும் சூடான நீர் உங்கள் தொண்டைக்கு நல்லது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் உங்கள் மூக்கின் பரணசால் சைனஸின் பின்னால் 3 முதல் 4 நாட்கள் வரை மறைக்கப்படுகிறது. நாம் குடிக்கும் சுடு நீர் அங்கு செல்வதில்லை. 4 முதல் 5 நாட்களுக்குப் பிறகு, பரணசால் சைனஸின் பின்னால் மறைந்திருந்த இந்த வைரஸ் உங்கள் நுரையீரலை அடைகிறது. நீங்கள் சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும். அதனால்தான் நீராவி பிடிப்பது  மிகவும் முக்கியம், இது உங்கள் பரணசால் சைனஸின் பின்புறத்தை அடைகிறது. இந்த வைரஸை மூக்கில் இருக்கும்போதே  நீராவியால் கொல்லப் பட வேண்டும்.

50°C இல், இந்த வைரஸ் முடக்கப்பட்டுள்ளது.  60° C வெப்பநிலையில் இந்த வைரஸ் மிகவும் பலவீனமாகி எந்த மனித நோய் எதிர்ப்பு சக்தியும் அதற்கு எதிராக போராட முடியும். 70°C க்கு இந்த வைரஸ் முற்றிலும் இறந்துவிடுகிறது. நீராவி இதைத்தான் செய்கிறது.

வீட்டில் தங்கியிருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு முறை நீராவி பிடிக்க வேண்டும்.

காய்கறிகளை வாங்க சந்தைக்குச் சென்றால், ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். சிலரைச் சந்திக்கும் போதோ அல்லது அலுவலகத்திற்குச் செல்பவர்களோ ஒரு நாளைக்கு 3 முறை நீராவி எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் வெறும் 5 நிமிடங்கள் நீராவியை உள்ளிழுக்க, ஒரு வாரம் காலை மற்றும் மாலை செயல்முறையைத் தொடங்கவும்.        

அனைவரும் ஒரு வாரத்திற்கு இந்த நடைமுறையைப் பின்பற்றினால் கொடிய கோவிட் -19 அழிக்கப்படும்.

இந்த நடைமுறைக்கு பக்க விளைவுகளும் இல்லை.

நாம் அனைவரும் இந்த கொரோனா வைரஸைக் கொன்று இந்த அழகான உலகில் சுதந்திரமாக வாழ முடியும்.

Copied-

      Jancy Caffoor







அறிவோம்


 

Thank You Dr. Nithiyananda Sir

2021/04/23

துரத்தும் கொரோனா

மிரட்டுது வாழ்வை

நாட்டில் மீண்டும் கொரோனா அலை

கைகளை கழுவுங்கள்

முகக் கவசம் அணியுங்கள்

சமூக இடைவெளி பேணுங்கள்

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்

என எவ்வளவுதான் அறிவுரைகள் தரப்பட்டாலும்,  சிலர் இவற்றைப் பொருட்படுத்துவதேயில்லை. இவர்களிடத்தில் கொரோனாவே வந்து பயம் காட்டினாலும்கூட, இவர்கள் தமது பிடிமானத்திலிருந்து அசைவதாக இல்லை. மனதால் மானசீகமாக உணராமல் சட்டத்திற்குப் பயந்து பின்பற்றுகின்ற எதுவும் ஆரோக்கியம் தரப்போவதில்லை.

New health guidelines to be followed till 31st May issued (English) 

April 23, 2021 at 6:26 PM

எனும் தொகுப்பிலிருந்து சுருக்கமான தகவல்கள் எனது பார்வையில் இதோ-

  • வீட்டிலிருந்து ஒரே நேரத்தில் இருவர் மாத்திரம் வெளியே செல்லலாம்
  • ஆசனங்களுக்கேற்ற இருக்கை – பேருந்து , புகையிரதம்
  • கார் , முச்சக்கர வண்டி - இருவர்
  • நீர்,  மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்கள்
  • அலுவலகம் - குறைந்தளவு ,அவசியமான ஊழியர்கள். வீட்டிலிருந்து வேலை செய்ய அழைப்பு
  • கூட்டங்கள் - இருக்கைகளின் அரைவாசிப் பேர்
  • சுப்பர் மார்க்கட், வர்த்தக நிலையங்கள், சலூன், வங்கிகள்,நீதிமன்றம் பாடசாலைகள், முன்பள்ளிகள் 50%  மானோருக்கு அனுமதி
  • நிர்மாணப் பணிப் பகுதிகள்  - அனுமதிக்கப்பட்டுள்ளது
  • பல்கலைக்கழகங்கள் - மூடப்பட்டுள்ளன.
  • தனியார் கல்வி நிறுவனங்கள் - அனுமதியில்லை
  • திருமணம் - 150 பேருக்குள் அழைப்பு
  • மரணச்சடங்கு – 25 பேர் அனுமதி
  • பார்டி – அனுமதியில்லை
  • சினிமா – 25 %
  • இசைக்கச்சேரி, சிறுவர் பூங்கா – அனுமதியில்லை
  • நீச்சல் தடாகம் - மூடப்பட வேண்டும்
  • இரவு விடுதி - மூடப்படல் வேண்டும்
  • உணவு விடுதிகள் - 50 வீதம்

அனைத்திலும் சுகாதார நடைமுறைகள்   கடைப்பிடிக்க வேண்டும்.

ஆரோக்கிய வாழ்வினை நாமும் பெற்று நம்மைச் சார்ந்தோருக்கும் வழங்குவோமாக

ஜன்ஸி கபூர்


2015/09/13

புதிய மோட்டார் வாகனச் சட்டம்




நவீனத்துக்குள் நாடும் மக்களும் உள்வாங்கப்படும் போது அவர்களின் வாழ்க்கையும் வசதியும் அதிகரிக்கின்றது. இத்தாக்கத்தின் பிரதிபலிப்பிலொன்றுதான் வாகனங்கள் அதிகரிப்புக்கள். முறையற்ற வாகன நகர்வின் மூலம் ஏற்படுகின்ற வாகன விபத்துக்கள் மூலம் அதிகரிக்கின்ற விபத்துக்கள் இதற்கு சான்று பகிர்கின்றது.

13.09.2015 முதல் அமுலுக்கு வரும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் இந்நிலையை மாற்றுமா

 வாகனம் வைத்திருப்பவர்கள் இதனைக் கட்டாயம் படியுங்கள் !

சீருடை அணிந்துள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும் , அத்துடன் முறையற்ற வகையில் செல்லும் வாகனங்களை தடுத்து  நிறுத்தும் அதிகாரமும் சாரதியின் உறுதிப்பத்திரம், வாகனத்தின் சகல ஆவணங்களையும் பரிசோதனை செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.  இது தவிர வாகனத்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகள் தொடர்பாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் அதிகாரம் உள்ளது. அதேவேளை, சாரதியின் அனுமதி பத்திரத்தை காவல்துறை அதிகாரி மூலம் கைப்பற்றப்படுமாயின்  14 நாட்களுக்கு அமுலில் உள்ள வகையில் தற்காலிக அனுமதி பத்திரமும் வழங்கப்பட வேண்டுமெனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது..
-------------------------------------------
-------  தண்டப்பண விபரம்-   ----
-------------------------------------------
*****சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000
*****புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
*****இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000
*****வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 +
****** ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000
********அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000
********3 முறைக்குமேல் அபராதம் விதித்தால்  2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும்.
********இதற்கு மேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலுமாக  ரத்துசெய்யபடும்.
******* வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)

- Jancy Caffoor -

   09.12.2015

2015/04/04

keyboard

 ௌ  ை  ா  ீ   ூ  ப   ஹ  க  த  ஜ
     q       w       e    r     t      y     u     i    o   p
--------------------------------------------------------
 ோ  ே   ்   ி   ு  ப    ர   க   த  ச ட 
   a      s       d     f     g    h     j    k    l     ;   ' 
--------------------------------------------------------
ெ        ம    ந   வ    ல    ஸ    ய   ொ 
  z    x     c      v     b     n       m       /      `
-------------------------------------------------------
 ஔ  ஐ  ஆ  ஈ  ஊ  ப  ங   க   த  ச  ட 
   Q    W    E    R   T    Y   U     I    O   P  {     }
-------------------------------------------------------
A     S    D      F     G     H    J     K   L   :    " 
ஓ   ஏ   அ     இ   உ    ப   ற    க   த  ச  ட 
--------------------------------------------------------
எ     ண   ன   ழ    ள      ஷ    ஸ்ரீ  ய   ஒ
Z   X  C    V     B     N      M<       >    ?     ~ 
-------------------------------------------------------

- Jancy Caffoor-

      03.04.2015


2014/07/25

தேன்



மருத்துவக் குணமுள்ள தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது?
-------------------------------------------------------
"உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 16:68-69

இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால்,

மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற மேற்படி குளுக்கோஸ் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து  திரவமாக வௌிப்படுகின்றது அதுவே தேன்.

இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள். அவ்வாறே தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தையும் எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர்.

- Jancy Caffoor-

2013/01/18

வெளிநாட்டு அஞ்சல்


என்னதான் இணையத்தின் முற்றத்தில் உலகம் சுருங்கிக் கொண்டாலும் கூட வெளிநாட்டு அஞ்சல்களின் பயணப் பாதைகள் இன்னும் தடைப்படவில்லை.
வான் வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ அனுப்பப்படும் வெளிநாட்டு அஞ்சல்களில் கடிதம், அஞ்சல் அட்டைகள், வான் கடிதம், பொதிகள் மற்றும் சிறிய பைக்கற்றுக்கள் உள்ளடங்குகின்றன.

வெளிநாட்டுக் கடிதங்களின் ஆகக் கூடிய நிறை 2 கிலோ கிராம் ஆகும். இந்தக் கடிதங்களை நடுத்தர உறையைப் பயன்படுத்தி தபாலிட வேண்டும். அஞ்சல் சேவையின் கீழ் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடிய ஆகக்கூடிய நிறை 30.5 கிலோவாகும்.

வெளிநாடுகள் A,B,C,D,E,F,G,H என 8 வலயங்களாகப்  பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலய நாடுகளுக்கும் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு கடிதங்களை பதிவு செய்ய முடியும். அவ்வாறே காப்புறுதி அஞ்சலில் ,அஞ்சல் அலுவலக சட்டதிட்டங்களுக்குட்பட்டு வங்கி வரைவு, காசோலை, நாணயங்கள், பணத்தாள்கள், இரத்தினக்கற்கள், தங்க ஆபரணங்கள், இலாபச் சீட்டுக்கள், என்பவற்றை அனுப்ப முடியும்.

- Jancy Caffoor-

மின்னஞ்சல் @


" ரே டாம்லின்ஸன் " எனும் கம்பியூட்டர் பொறியிலாளரே 1971ம் ஆண்டு இச் சின்னத்தை உபயோகித்து முதன்முதலாக மின்னஞ்சலை அனுப்பினார். கணனி விசைப் பலகையில் எவரின் பெயரையும் குறிக்காத, குழப்பம் விளைவிக்காத சின்னமாக @ ஐ அவர் பயன்படுத்தினார்.

இந்த @ 18ம் நூற்றாண்டில் புழக்கத்தில் வந்தது. அந்த எழுத்து தொடர்பாக பல ஆராய்ச்சிகள் இருந்தாலும் கூட, ஆராய்ச்சியாளர் டெனிஸ் என்பவர் கூறுகின்றார் ப்ரெஞ்ச், ஜேர்மனிய வியாபாரிகள் a எழுத்தை வேகமாக உச்சரிப்பதால் ஏற்பட்ட திரிபு இதுவென்று!

2000ம் ஆண்டில் இது தொடர்பாக கருத்துக் கூறிய இத்தாலி நாட்டவர், 14ம் நூற்றாண்டுக்குரிய வியாபார தஸ்தாவேஜூகளில் இவ்வெழுத்துக் காணப்படுவதாகக் கூறினார். "anfora" எனும் அளவைக் குறிக்க இது பயன்பட்டதாகக் கூறினார். இது arroba என்பதின் மொழிபெயர்ப்பாகும். 1885ல் வியாபார ரீதியிலான "a" அண்டர்வுட்  தட்டச்சு  மெஷினில் சேர்க்கப்பட்டது.

இதனை ஸ்பானியர்கள் "arroba" என்றும், பிரெஞ்சுக்காரர் "arobase"  என்றும் , அமெரிக்கர், பிரிட்டிஷ் காரர்கள் "at-sign"  என்றும், ஜெர்மனியர்" at- Zeichen" என்றும், எஸ்தோனியர் "at- mark" என்றும்,  ஜப்பானியர் "atto maak" என்றும் உச்சரிக்கின்றார்கள்.

இதன் உருவருத்தை குரங்கின் வால் என சிலரும், சிலரோ நத்தை என்றும் கூறுகின்றனர்.


- Jancy Caffoor-





2012/12/09

யாழ் சில அடையாளங்கள்

இலங்கை வரைபடத்தில் யாழ்ப்பாணம்


யாழ் வானில் உல்லாசமாய் பறந்து செல்லும் வான் பறவைகள்


நான் கல்வி கற்ற பாடசாலை


யாழ்ப்பாணத்திலுள்ள பள்ளிவாசல்
(செம்மா தெரு)


யாழ் பல்கலைக்கழகம்



  யாழ் பொது நூலகம்

                                               
                                             யாழ் தபாலகம்


நல்லூர் கந்தசுவாமி கோவில்


                                யாழ்ப்பாண பலாப்பழச் சுளை


மொந்தன் வாழைப்பழம்


மாம்பழம்


                                 வாயூறும் கிளிச் சொண்டு மாங்காய் வற்றல்

                                                             
                                                   யாழ் - திராட்சை
                                                                     

யாழ் சுவைமிகு மரக்கறிகள்


                                                   யாழ் கடல்


அழகான கசுரினா கடற்கரை



நயினாதீவு நாகதீப  விஹாரைக்குச் செல்வோர்


நயினா தீவு - நாக தீப விஹாரை


வளமான மண்ணில் புன்னகைக்கும் வயலொன்று


யாழ் தீபகற்பகத்தின் அடையாளமாய் பனை மரங்கள்



கீரிமலை -  கேணி


யாழ் பண்ணைக் கடல்


யாழ்ப்பாணக் கோட்டை



யாழ் மணிக்கூட்டுக் கோபுரம்


யாழ்ப்பாண பெரிய கடை பகுதிகள்

                                                               

 ஐஸ் கிறீம் சுவைப்பகம்


யாழ் போதனா வைத்தியசாலை



யாழ்ப்பாணக் கச்சேரி


யாழ்ப்பாணம் சுப்ரமணியப் பூங்கா


யாழ்ப்பாணம்- துரையப்பா விளையாட்டரங்கு
(முற்றவெளி)



Point Pedro - Light House


போர்ச் சுவடுகள்



இறுதிக் கட்ட இராணுவ போர்த் தளபதிகள்


போருக்குப் பின்னரான யாழ் முஸ்லிம் கல்லூரி வீதி


சேதமடைந்துள்ள யாழ்ப்பாண புகையிரத நிலையம்


சேதமடைந்துள்ள பள்ளிவாசல்


வட பகுதியின் அமைவிடங்கள்


யாழ் நகர் - வரைபடம்