About Me

2021/04/23

துரத்தும் கொரோனா

மிரட்டுது வாழ்வை

நாட்டில் மீண்டும் கொரோனா அலை

கைகளை கழுவுங்கள்

முகக் கவசம் அணியுங்கள்

சமூக இடைவெளி பேணுங்கள்

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்

என எவ்வளவுதான் அறிவுரைகள் தரப்பட்டாலும்,  சிலர் இவற்றைப் பொருட்படுத்துவதேயில்லை. இவர்களிடத்தில் கொரோனாவே வந்து பயம் காட்டினாலும்கூட, இவர்கள் தமது பிடிமானத்திலிருந்து அசைவதாக இல்லை. மனதால் மானசீகமாக உணராமல் சட்டத்திற்குப் பயந்து பின்பற்றுகின்ற எதுவும் ஆரோக்கியம் தரப்போவதில்லை.

New health guidelines to be followed till 31st May issued (English) 

April 23, 2021 at 6:26 PM

எனும் தொகுப்பிலிருந்து சுருக்கமான தகவல்கள் எனது பார்வையில் இதோ-

  • வீட்டிலிருந்து ஒரே நேரத்தில் இருவர் மாத்திரம் வெளியே செல்லலாம்
  • ஆசனங்களுக்கேற்ற இருக்கை – பேருந்து , புகையிரதம்
  • கார் , முச்சக்கர வண்டி - இருவர்
  • நீர்,  மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்கள்
  • அலுவலகம் - குறைந்தளவு ,அவசியமான ஊழியர்கள். வீட்டிலிருந்து வேலை செய்ய அழைப்பு
  • கூட்டங்கள் - இருக்கைகளின் அரைவாசிப் பேர்
  • சுப்பர் மார்க்கட், வர்த்தக நிலையங்கள், சலூன், வங்கிகள்,நீதிமன்றம் பாடசாலைகள், முன்பள்ளிகள் 50%  மானோருக்கு அனுமதி
  • நிர்மாணப் பணிப் பகுதிகள்  - அனுமதிக்கப்பட்டுள்ளது
  • பல்கலைக்கழகங்கள் - மூடப்பட்டுள்ளன.
  • தனியார் கல்வி நிறுவனங்கள் - அனுமதியில்லை
  • திருமணம் - 150 பேருக்குள் அழைப்பு
  • மரணச்சடங்கு – 25 பேர் அனுமதி
  • பார்டி – அனுமதியில்லை
  • சினிமா – 25 %
  • இசைக்கச்சேரி, சிறுவர் பூங்கா – அனுமதியில்லை
  • நீச்சல் தடாகம் - மூடப்பட வேண்டும்
  • இரவு விடுதி - மூடப்படல் வேண்டும்
  • உணவு விடுதிகள் - 50 வீதம்

அனைத்திலும் சுகாதார நடைமுறைகள்   கடைப்பிடிக்க வேண்டும்.

ஆரோக்கிய வாழ்வினை நாமும் பெற்று நம்மைச் சார்ந்தோருக்கும் வழங்குவோமாக

ஜன்ஸி கபூர்


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!