About Me

2020/07/20

காற்று வெளியிடைக் கண்ணம்மா


காற்று வெளியிடைக் கண்ணம்மா உந்தன்
காதல் என்னுள் பிறக்குதுதடி இசையா
கனவும் தீன்சுவையாய் உறவாடும் மனதோடு  
கற்பனையும் உயிர்க்குதடி உந்தன் அன்பாலே

உந்தன் விழிகளிரண்டும் எழிலோவியமே
சிந்தும் உன்மேனியும் தங்கச்சிலையே
வந்தேன் உன் னிழலாய்   தினம் தினமே
தந்தேன்  என்னையே உன்னிடத்தில் காதலுடன்

திரை விரிப்பாய் நாணத்தால் எனையும் ரசித்தே
வரைந்திடுவாய் எனையே உந்தன் கூர்விழியாலே
கரையுமோ கற்கண்டும் உந்தன் சுவைப் பேச்சாலே
தரையுமே ஒளிருதே தங்கமுந்தன் சுவடாலே

வட்டநிலாவே நீயும் பிழிகின்றாய் அமிர்த மொழியே 
தொட்டணைத்தால் தென்றலும் முறைத்தே விரட்டுதே
மனசோரம் ஒளிர்கிறாய் மின்னலாய் வீழ்ந்தே
மங்களமாய் இணைந்திட்டாய்   என் இல்லறமாக


ஜன்ஸி கபூர்  


மனிதர்கள் ஏன் மகிழ்ச்சியே நோக்கி மட்டும் பயணிக்க விரும்புகிறார்கள்

வாழ்க்கை என்பது நீண்ட தேடல். ஓவ்வொருவரும் தமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் வெற்றி பெற வேண்டுமென்றே எதிர்பார்ப்புடனே பயணிப்பதால் மகிழ்ச்சியை அடிமனம் விரும்புகின்றது. மகிழ்ச்சியும் ஒரு ஊக்கம் தருகின்ற உணர்வுகளே. மகிழ்வான மனநிறைவில் செயல்களை விருப்புடன் செய்வதால் இலகுவாகவும் தவறின்றியும் செய்ய முடிகின்றது. ஏனெனில் மகிழ்வு உற்சாகத்தின் உந்தலாகும். ஒரு மனிதன் தன்னை உற்சாகமாகத் தேடி அனைத்துக் காரியங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு   மகிழ்ச்சி அவசியமாகின்றது.

அகமகிழ்வின் ஆற்றல் வெற்றியில் குவிகிறது என்பது திண்ணம்

ஜன்ஸி கபூர் 

திகில் பயணம்

 வெண்பனி சூழ்ந்திடும் வெள்ளிடை மலையை
வெருட்டிடும் ஆதவன் வெம்மைக் கதிர்கள்
உருகிடும் பனியால் உறையுது நீரும்
துருவத்தின் குளிர்மையில்  விறைக்குது படகும்

நடுங்கும் குளிரோடையில் துடிக்குது படகும்
தடுமாறும் மனங்களும் தவிக்குது வலியில்
இடுக்கண் தந்திட்ட  இயற்கையின் எழுச்சி
வடுவொன்றைத் தந்தே  வாழ்வாகிப் போனது

மலை தழுவும் அழகு  நீரோட்டமே
விலையில்லா உயிர்களுக்கது மரண போராட்டமாம்
தள்ளாடும் படகும் தாங்கிடும் மாந்தர்
உள்ளத்தின் வலிமை கரையொதுக்கி களிப்பூட்டும்

ஜன்ஸி கபூர்   


2020/07/19

ஆற்றல் கொள்

ஆற்றல்_கொள் அவனிக்குள் அடையாளமாய்/
 ஊற்றாய் மாறியே ஊட்டமிடு வளங்களைத்தான்/
காற்றின்  மொழியுடனே சேற்றிலும் பலனுண்டே/
போற்றுவார் உன்னையே பெண்மையாய் நிமிர்ந்திடு/

ஆளுமை வளர்த்திட்டால் அண்டமும் தலைசாய்க்கும்/
ஆழிப்பேரலையும் அடங்குமே அறிவின் துணையுடன்/
அஞ்சாமல் பணியாற்று மானுடம் பெருமையாகும்/
ஆக்கங்கள் படைத்திடவே சிந்தனையைக் கூராக்கு/

தன்னம்பிக்கை கொண்டெழு திறமைகள் உனதாகும்/
வென்றெடுப்பாய் விருதுகளே சாதனைகள் சரித்திரமே/
சென்ற விடமெல்லாம் முன்மாதிரி நீயன்றோ/
கொண்டாடும் மாந்தரெல்லாம் பின்வருவார் அன்போடு/

வேராகத் தாங்கிடு ஊரே போற்றிடுமே/
போராடும் வாழ்வினிலே வலியும் வல்லமையே/
நாரும் துணைதானே மாலையாய் பிறப்பெடுக்க/
பாருக்கும் தெரியட்டும் ஆற்றலோடு வாழ்ந்திடு/

ஜன்ஸி கபூர்