About Me

2020/07/19

ஆற்றல் கொள்

ஆற்றல்_கொள் அவனிக்குள் அடையாளமாய்/
 ஊற்றாய் மாறியே ஊட்டமிடு வளங்களைத்தான்/
காற்றின்  மொழியுடனே சேற்றிலும் பலனுண்டே/
போற்றுவார் உன்னையே பெண்மையாய் நிமிர்ந்திடு/

ஆளுமை வளர்த்திட்டால் அண்டமும் தலைசாய்க்கும்/
ஆழிப்பேரலையும் அடங்குமே அறிவின் துணையுடன்/
அஞ்சாமல் பணியாற்று மானுடம் பெருமையாகும்/
ஆக்கங்கள் படைத்திடவே சிந்தனையைக் கூராக்கு/

தன்னம்பிக்கை கொண்டெழு திறமைகள் உனதாகும்/
வென்றெடுப்பாய் விருதுகளே சாதனைகள் சரித்திரமே/
சென்ற விடமெல்லாம் முன்மாதிரி நீயன்றோ/
கொண்டாடும் மாந்தரெல்லாம் பின்வருவார் அன்போடு/

வேராகத் தாங்கிடு ஊரே போற்றிடுமே/
போராடும் வாழ்வினிலே வலியும் வல்லமையே/
நாரும் துணைதானே மாலையாய் பிறப்பெடுக்க/
பாருக்கும் தெரியட்டும் ஆற்றலோடு வாழ்ந்திடு/

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!