About Me

2020/09/23

வான வீதியில்

 


வானவீதியில் உலாவும் மேக ஊர்வலத்தில்/

ஊர்வலத்தில் பன்னீரைத் தூவுதே மழையும்/

மழையும் பொழிகையில் மண்வாசம் மூச்சுக்குள்/

மூச்சுக்குள் பின்னிடுமே இயற்கையின் நேசமே/


நேசமே செழிக்கையில் வாழ்ந்திடுமே தேசமும்/

தேசமும் மகிழ்ந்திடுமே சுயநலமற்ற அன்பினால்/

அன்பினால் ஆளலாம் அகிலத்தின் மாந்தரை/

மாந்தரையும் வாழவைக்கும் ஆதவனும் வான்வீதியில்/


 

வான வீதியில்

 ---------------------

வான வீதியில் பறக்கின்றதே சிறகுகள்/

சிறகின் வருடலில் மயங்குதே மனதும்/


மனதை வருடுகின்றதே தென்றலும் சுகமாக/

சுகத்தின் சுவையினை இரசிக்கின்றதே விழிகளும்/


விழிகளை ஈர்க்கின்ற மதியும் அழகே/

அழகின் கோலங்களை பிசைகின்றதே இயற்கையும்/


இயற்கையும் வரைகின்றதே அற்புத ஓவியங்களை/

ஓவியங்களைத் தீட்டிடுமே வானவில் தூரிகையும்/


தூரிகையும் வரைகின்றதே ஏழு வர்ணங்களை/

வர்ணக் கலவைதானே  வான வீதியும்/





2020/09/22

கண்ணீரால் எழுதாதே

கருத்தரிக்கும் கனவுகளுக்குள் கானலை ஊற்றாது

கருத்தினில் வலிமையேற்றி முயற்சியோடு செயலாற்று


வீழ்கின்ற சருகெல்லாம் உரம்தானே மண்ணுக்கும்

அழுகின்ற வாழ்வும் அவலத்தின் உறைவிடமே


வெற்றியைக் காணவே பற்றிடு இலக்கையே

அன்பின் புன்னகையால் மனங்களை வென்றிடு

 

இன்பத்தின் வாழ்க்கைக்குள் சுற்றமும் இணைகையில்

இல்லையே தோல்வியும் தொட்டதும் துலங்குமே

 

விதியினை நீதானே கண்ணீரால் எழுதாதே

விடியல் தேடலில் அழுதல் பாவமே


ஜன்ஸி கபூர்  






கற்பூரவல்லி

 


கற்பூரவல்லி கை வைத்தியம் நமக்கே/

நற்பலன் தந்திடுமே வளமான வாழ்விற்கே/

தண்டும் இலையும் மருந்தே நமக்கு/

தணியுமே காய்ச்சலும் தலையிடியும் போகுமே/


கண் அலற்சிக்கு பூச்சு மருந்தாம்/

கரைந்திடுமே கட்டிகளும் இலைச் சாற்றிலே /

மனக்கோளாறும் மறைந்திடுமே ஓமவல்லிச் செடியிலே/ 

மனமும் சுகத்தில்  மருத்துவத்தின் மாண்பில்/


இரத்தத்தின் சுத்திகரிப்பால் இதயத்திலே மகிழ்வோட்டம்/

இலைச் சாற்றிலேதான் சளியுமே கரைந்திடுமே/

அழகிய செடியிலே அகன்றிடுமே நோய்களுமே/

குழந்தைகளைக் குணமாக்கும் குடிமனை  மருத்துவமே/


ஜன்ஸி கபூர் - 22.09.2020







2020/09/21

நிலா

 

சிந்துகின்ற வெள்ளொளி படர்ந்திடும் பந்தலிலே

சிதறிக் கிடக்கின்ற அஞ்சனமும் பேரழகே

வெண்மேகத் தாவணிக்குள் மறைத்திடும் முகமதைக்

காண்போரும் கண்படுவாரே எழில் கண்டே 


காற்றும் உதைத்திடாத உருளைப் பந்தைக்

காட்டியே சோறூட்டுவாரே அன்பின் அன்னையும்

ஆழ்கடலும் பொங்கியே உமிழ்ந்திட்ட நுரைக்குள்

விசும்பும் மேனியினை நனைத்தே மகிழ்ந்திடுமே 


பூமிப் பசிக்கு பரிமாறப்பட்ட தோசையைப்

பகிர்ந்திடுமோ சிறகடிக்கும் வான் பறவைகள்

சிதறிய விண்மீன்களின் ஒளி விளக்கினை

சிதைத்திடுமோ ஆதவனின் மறை விரிகதிரும்


இருண்ட காட்டினில் அலைந்திடும் தேவதையை

இதய அன்பால் வாழ்த்திடுமே அல்லியும்

ஆகாய வீதியில் யாரெறிந்தார் வெள்ளியை

அண்ணார்ந்து பார்க்கையில் அதிசயிக்கிறதே விழிகள்

ஜன்ஸி கபூர் - 21.09.2020