About Me

2020/09/22

கண்ணீரால் எழுதாதே

கருத்தரிக்கும் கனவுகளுக்குள் கானலை ஊற்றாது

கருத்தினில் வலிமையேற்றி முயற்சியோடு செயலாற்று


வீழ்கின்ற சருகெல்லாம் உரம்தானே மண்ணுக்கும்

அழுகின்ற வாழ்வும் அவலத்தின் உறைவிடமே


வெற்றியைக் காணவே பற்றிடு இலக்கையே

அன்பின் புன்னகையால் மனங்களை வென்றிடு

 

இன்பத்தின் வாழ்க்கைக்குள் சுற்றமும் இணைகையில்

இல்லையே தோல்வியும் தொட்டதும் துலங்குமே

 

விதியினை நீதானே கண்ணீரால் எழுதாதே

விடியல் தேடலில் அழுதல் பாவமே


ஜன்ஸி கபூர்  






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!