About Me

2020/09/22

கற்பூரவல்லி

 


கற்பூரவல்லி கை வைத்தியம் நமக்கே/

நற்பலன் தந்திடுமே வளமான வாழ்விற்கே/

தண்டும் இலையும் மருந்தே நமக்கு/

தணியுமே காய்ச்சலும் தலையிடியும் போகுமே/


கண் அலற்சிக்கு பூச்சு மருந்தாம்/

கரைந்திடுமே கட்டிகளும் இலைச் சாற்றிலே /

மனக்கோளாறும் மறைந்திடுமே ஓமவல்லிச் செடியிலே/ 

மனமும் சுகத்தில்  மருத்துவத்தின் மாண்பில்/


இரத்தத்தின் சுத்திகரிப்பால் இதயத்திலே மகிழ்வோட்டம்/

இலைச் சாற்றிலேதான் சளியுமே கரைந்திடுமே/

அழகிய செடியிலே அகன்றிடுமே நோய்களுமே/

குழந்தைகளைக் குணமாக்கும் குடிமனை  மருத்துவமே/


ஜன்ஸி கபூர் - 22.09.2020







No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!