
என் விடியல்கள்
முகங் கழுவிக் கொள்கின்றன
தினமும்
உன் நினைவுகளில்!
இருளின் இம்சைக்குள்
தொலைய மறுத்த உறக்கமேனோ.........
உன் விழிக்குள் பார்வையாய்
உறங்கத் துடிக்கின்றது!
அறிவாயா.....
நீ யென்னைக் கடந்து செல்லும்
ஒவ்வொரு கணங்களும்
இறக்கை நெய்கின்றேன் காற்றோரம்
சுவாசமாய் உன்னுள் வீழ!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!