About Me

2019/06/23

உன்னால்



நட்சத்திரம் விழித்திருக்கும்
பால்வெளியில்............
விழிகளைத் தாக்கும்
ஒளி வருடலாய் நீ!

பனி படர்ந்த போர்வையில்
முத்தென............
முத்துமிட்டுச் செல்லும் வியர்வைத்துளிகளாய்
உன் நினைவுகள்!

இப்பொழுதெல்லாம்
அடிக்கடி
உன் ஞாபக வரிகளை
வாசிக்கும் போது ..............
காயமாகின்றன என் விழிகள்!

என் விரல்களைப் பார்......
உனக்கு கடிதங்கள் எழுதி எழுதியே
ரேகைகள்
காணாமற் போயின!

உன் நினைவுப் பேரலையில்
வீழ்ந்து தவிக்கையில்
சுவாசம் கரைக்கின்றேன் - என்
வாசத்தை விற்றவளாய்!

கொல்லாதே- எனை
அணுவணுவாய் கொல்லாதே!
எஞ்சிய காலத்திலாவது
கொஞ்சம் வாழ வரம் கொடு!......

உன்னை இப்பொழுதெல்லாம்
யாசிக்கின்றேன் ..........
அனுமதிப்பாயா...........
அவசரமாய் உன் ஞாபகங்களை
பெயர்த்தெடுக்க!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!