About Me

2012/06/05

கவிதாயினி





இன்று பொசன் போயா தினம்.......(2012. 06.04)

நிலவின் ஒளிக்கசிவுகள் மெலிதாக வானில் கோடுகள் கிழித்துக் கொண்டிருந்தன. இருளோடு களைத்துப் போராடிக் கொண்டிருக்கும் சில்வண்டின் ரீங்காரம் வன்காரமாய் செவியை துளைத்துக் கொண்டிருந்தது. ஈரலிப்பான இருளின் கனத்தை உலர்த்திக் கொண்டிருந்தது காற்று..ரோசா .முற்களுடன் மோதிக் கொண்டிருந்த பனித்துளிகள் தம் வலிதற்ற போராட்டத் தோல்வியால் திரவமாய் உருகிக் கொண்டிருந்து..........
கண்களை வலுக்கட்டாயமாக இறுக்கினேன்.....உறக்கம் தொலைத்த விழிகள் பல மணி நேரப் போராட்டத்தினுள் தன்னை அடக்கிக் கொண்டிருந்தது......

" காற்றின் சிறகினிலே"....!

என் கவிதைகளை பலருக்கு அடையாளப்படுத்திய எனது வலைப்பூ....ஓரிரு நாள் இடைவெளியின் பின்னர் மீண்டும் அதனுள் சில பதிவுகளை இட நானின்று முயற்சிக்கும் போது வலிதான தோல்வியின் ரேகைகள் என்னை ஆட்கொண்டன...அதனை திறக்க முடியவில்லை.............காரணமும் என்னால் அறியமுடியவில்லை........

மனசு வலித்தது...சோகங்களின் பிறாண்டலால் கண்களுக்கும் அமிலம் சுரந்தது.......முடியவில்லை....பல நாட்களாக என் மனதில் புரண்ட கவிதைகளின் தடங்கள் தானாகவே அழிக்கப்பட்டு விட்டன.....உணர்வுகளுடன் பேசிய கவிதைகள் காயம் தந்து மறந்து, மறைந்து விட்டன.......

கனவுகளுடன் கைகுலுக்கி இனிமையும், மயக்கமும் தந்த அந்தக் கவிதைகள் இனி எனக்குச் சொந்தமில்லை....உள்ளத்தின் வேதனையில் உயிரும் தன்னை நனைத்து விம்பத் தொடங்கிவிட்டது.......

இருளை மிரட்டியபடி எங்கிருந்தோ அலறும் வாகனச் சத்தங்களின் ஓசையில்  அடிக்கடி தடுமாறிக் கொண்டிருந்த சிந்தை ஈற்றில் இரவின் அமைதியில் அடங்கிப் போனது..

தோல்விகளால் அடிக்கடி ரணப்படும் என் வாழ்வில் நான் இன்றும் வழமைபோல் தன்னம்பிக்கையுடனான முனைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை என் கரங்கள் தொட்டு விடும் தூரத்தை ஓரளாவது முட்டிக் கிடக்கும்............

ஏதோ நினைத்தவளாக புதிய வலைப்பூவை உருவாக்கும் முயற்சியில் மானசீகமாக என்னை ஈடுபடுத்தத் தொடங்கினேன்

"கவிதாயினி மெதுவாய் என்னுள் எட்டிப் பார்க்கத் தொடங்கினாள்"

கவிதாயினி..............

என் உணர்வுகளை நேசிக்கப் போகும் புதிய வலைப்பூ...........

மீண்டுமொரு வலைப்பூ தன்னப்பிக்கையுடன் கூடிய தன் பயணத்தை ஆரம்பித்து விட்டது...இதோ.........உங்களுடன் இணைந்து கொள்ள கவிதாயினியும் புறப்பட்டு விட்டாள் !

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!