2012/07/23
உணர்வோசை
இந்தப் புவிக்கோளத்தில் - நாம்
இரணயாத சமாந்தரங்கள் !
அதனாற்றானோ
என்......................
ஒவ்வொரு நொடிப் பொழுதும்
உன் நிராகரிப்பின் சலிப்போடு
விழிநீராய் வழிந்தோடுகின்றது!
உன் நேச ஒளியில்
அன்று......
விட்டிலான என் மனசோரங்களெல்லாம்
இப்போது.......
வெறுமைச்சிறகுகளால்
பறக்கின்றன
உயிர்ப்பை துறந்தபடி!
என் வாழ்க்கை மெழுகு- உன்
அனல் பட்டதால் உருகி உருகியே
கரைந்ததில்...............
கறைப்படிவுகளாய்
சோதனைகளும் சோர்வுகளும்
படிந்து கிடக்கின்றன
என்னுள்!
நம்முள் நனைந்த கனவெல்லாம்
உலர்ந்து உவப்பின்றி- பிரிவின்
புலர்வில் காணாமல்தான் போனது!
இருந்தும்..............
என் வெற்றிட மனதில்
சுற்றியோடுமுன்னை நிதமும்
பற்றிப்பிடிக்க காத்திருக்கின்றேன்!
சற்றுப் பொறு.............
நம்பிக்கையின் அதிர்வோசைகள்
மனத் தந்தியில்
முரசறைகின்றதே பலமாய்!
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!