About Me

2012/07/23

சின்னத் தாமரை !


அந்த நிலாவைக் களவாப் பிடித்தே
பொத்தி வைச்சேன் நெஞ்சுக்குள்ள ............
பௌர்ணமி யவள் சிரிப்பினில்
வாழ்வின் இருளும் மிரண்டோடியதுவே!

தாமரை விழி விரித்தாள் - இன்ப
மகரந்தங்கள் அள்ளித் தெளித்தாள் - தினம்
மடியினில் மெல்லப் புரண்டாள்
கருவண்டாய் எனை ஈர்த்து நின்றாள்!

பஞ்சுக் கரத்தால் முகம் வருடியே- என்
நெஞ்சுக்குழியின் சுவாசமாய் நிறைந்து நின்றாள் !.....
வஞ்சியென் னன்பில் மூழ்கிக் கிடந்த - அந்த
பிஞ்சு மகள் என் செல்வமன்றோ!

சந்தனம் கரைத்து மேனி கொண்டாள்
மல்லிகையின் மொட்டுக்களின் வாசம் கொண்டாள் !
அள்ளியணைத்திட ஆசை கொண்டாள்- அந்த
வண்ண மகளவள் வைரமானாள்!

மழலை தேனில் என் பெயர் நனைப்பாள்-என்
ஜடை அவிழ்த்தும் மெல்ல விழுப்பாள்..........
வெள்ளிக் கொலுசொலி யவள் சிரிப்பில்
வெள்ளி னிலவாய் கண்ணுள் ஒளிர்வாள்!


(எங்கள் செல்லம் அஸ்காக் குட்டிக்கான என் கவிதை)


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!