About Me

2020/05/30

கொஞ்சிப் பேசும் காதல் சிட்டுக்கள்

 கொஞ்சிப் பேசுமென்  காதல் சிட்டே

நெஞ்சம் ஏங்குதே உன்னைக் காணவே

வட்டக்கண்களில் கசியும் காதல் கண்டு

பட்டுச் சிறகுகளும் மெட்டோடு பாடுதே


காற்றின் கொஞ்சலில் உதிரும் பூக்களால் 

சிறகாடை நெய்தே புன்னகைக்கின்றாய் அழகாய் 

செவ்விதழ்கள் உரசும் அன்பில் நசிந்து

சிந்தை வருடுகின்றாய் மனசும் நெறையுதே


மஞ்சள் மேனி நாண சிரிக்கின்றாய்

நெஞ்சில் நிறைகிறாய் நெசமாய் இனிக்கிறாய்

அஞ்சாதே அன்பே பிரிவில்லை நமக்கே!

பஞ்சமாபாதகம் செய்தே பிரித்திடார் நம்மை


வயலோரம் வயசுப் புள்ள வந்திடாதே

பய புள்ளைங்க கல்லெடுத்து அடிச்சிடுவாங்க....

பட்டுச் சிறகுதான் நமக்கிருக்கே ஆனந்தமாய்

எட்டுத் திக்கெங்கும் பறந்திடலாம் சுதந்திரமாய்!


ஜன்ஸி கபூர் 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!