About Me

2021/05/11

உம்மா

 

தாயே

எனது கைவிரல்கள் தொட்டு நீங்கள் பழக்கிய வாழ்க்கைக் கோலச் சுவடுகளைப் பார்த்து இவ்வுலகம் பிரமித்து நிற்கின்றது.

பிறர் அறியாது என்னுள் முகிழ்த்த வலிகளை நீங்கள் இரகஸியமாக உங்கள் கண்ணீரால் பொறுக்கியெடுக்கையில், என் தாயின் சுவர்க்க நிழலின் அருகாமை என் வேதனைகளைக் குறைத்திருப்பதை நீங்கள் அறிவீர்களா?

என் ஏற்றத்தின் ஏணியான உங்கள் தாய்மையின் மானசீக ஆசிர்வாதமும் படைத்த வல்லோனின் அருளும் என் பயணப் பாதையை எவ்வித இடையூறுகளுக்கு மத்தியிலும் தொய்வின்றிக் கொண்டு செல்கின்றது.

தாயே....

உங்கள் அருகாமையுடன் நான் வாழ்கின்ற பிரமாண்டமான உலகம் அழகாக இருக்கின்றது. ஆறுதலாகவும் இருக்கின்றது.

நான் தோள் சாய்கின்ற உங்கள் மடியின் மானசீக விசாலம் யாருக்குப் புரியும்?

உங்கள் அன்பின் மொழியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

என் சாதனைகளின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் நீங்கள்தான் தன்னம்பிக்கையின் ஊற்று.

அன்னையர் தின வாழ்த்துக்களை என் அன்பின் மொழி கொண்டு வரைகின்றேன். இனித் தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு நாட்களும் உங்கள் ஆரோக்கியப் பேணுதலுடன் தொடரட்டும்.

அன்னையர் தின வாழ்த்துக்கள் உம்மா....

ஜன்ஸி கபூர் -09.05.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!