About Me

2020/07/01

பழைமை வாசம்

இளமை அமிர்தம் வடியும் சோலை/
இரம்மியம் பூத்தே நனையும் காதலால்/
பேசும் காற்றோடு மோதும் மேகங்கள்/
பேரெழிலாய் வீழ்ந்தே ஓடுமே தன்னாலே/

கண்களின் வியப்பில் மங்கள வானம்/

வண்ணச் செழிப்போடு மரங்களின் கானம்/
எண்ணமோ குவிக்குது மகிழ்வின் ஈரம்/
விண்ணின் விடியலாய் அற்புத வரம்/

தென்றல் தழுவுகையில் நீரோடை நாணும்/

தெவிட்டா அன்போடு காத்திருக்கும் ஈருருளி/
இணையும் வாலிபங்களோடு உலா வரும்/
இயற்கை வெளியோ உல்லாசப் புன்னகையுடன்/

சோலை வீதியினில் சோர்வும் மனதறியா/

சோம்பல் களைத்தேதான் சோடியாய் உலாவிடலாம்/
தூய்மைக் காற்றில் நலம் தேடும்/
துணிந்த பயணமிது பழைமையின் வாசமிது/

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!