அண்ணா எனும் ஆளுமைக்குள் கவிதையும்/
எண்ணத்தில் நிறைந்ததே இலக்கியத் தமிழில்/
காண்போர் வியந்திடுவாரே பேச்சின் ஆற்றலில்/
அறிவுலக மேதையாக முத்திரையும் பதித்தாரே/
ஜன்ஸி கபூர்
அண்ணா எனும் ஆளுமைக்குள் கவிதையும்/
எண்ணத்தில் நிறைந்ததே இலக்கியத் தமிழில்/
காண்போர் வியந்திடுவாரே பேச்சின் ஆற்றலில்/
அறிவுலக மேதையாக முத்திரையும் பதித்தாரே/
ஜன்ஸி கபூர்
தேர்வு
-------------
தேர்வும் ஒரு யுத்தமே வாழ்வில்/
தேடிய அறிவினைப் பரீட்சிக்கும் பொழுதெல்லாம்/
ஆயுதமாகக் கரம் தொடுகின்றது பேனா/
ஜன்ஸி கபூர் - 13.09.2020
அச்சாணியாகப் பற்றிடும் தலைமையே சக்தியாகிப்
பற்றிடுமே காரியங்களின் வெற்றி உயர்விற்கே
வழிகாட்டல் இல்லாத வாழ்வின் செயல்கள்
வழுவிழந்து வீழ்கின்றதே பெறுமதியும் இழந்து
தழுவிடும் தலைமையும் படிக்கட்டே நமக்கு
வாழ்ந்திடுவோம் காரியங்களும் சிறப்பாக ஆற்றியே
ஜன்ஸி கபூர்- 12.09.2020
பாரதி புலமையும் பன்மொழியில் முழங்கியது
முழங்கியது உணர்வும் காக்கையின் சிந்தனையில்
சிந்தனையில் சீர்திருத்தம் உயிர்த்தனவே கவிதைகள்
கவிதைகள் வாழ்வாக வாழ்ந்தாரே பாரதி
ஜன்ஸி கபூர்
துளியேனும் வீழ்ந்திடாதோ நீரும் பருகிட/
அழிகின்ற பசுமையால் பாலைவனமாகின்றதே தேசமும்/
பழிவந்து சேருமோ விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கே/
தெளிகின்ற சிந்தனைகளால் காத்திடுக இயற்கைதனை/
பொழிகின்ற மழையும் பொக்கிசமே எமக்கு/
விழுகின்ற நீரினைச் சேமிப்போம் வாழ்வதற்கே/
ஜன்ஸி கபூர்
நெடுநெடுவென வளர்ந்த பசுமை மரங்கள்/
சிலுசிலுவென வீசிய காற்றில் அசைகையில்/
கமகமவென மலர்களும் நறுமணம் சிந்த/
கீசுகீசுவென குருவிகளும் சிறகடித்தனவே வானில்/
ஜன்ஸி கபூர்
எழுத்தறிவின் பண்படுத்தலில் நம் வாழ்வும்/
வளர்த்திடுமே அறிவையும் தகுதியையும் என்னாளும்/
கருத்தையும் சுதந்திரமாக முன்வைத்திடுமே எழுத்தும்/
வருந்தும் மானிடத்தையும் காத்திடுமே ஆயுதமாக/
ஜன்ஸி கபூர்
கிராமம் உயிர்க்கின்றது பண்பாடுகளின் சுவடாய்
இயற்கை எழிலும் கொஞ்சிடுதே ஆனந்தமாக
கழனிகளின் இதயமாகி பசுமையாகப் பூக்கையில்
களித்திடுமே மனமும் மாசில்லாத வாழ்வுக்குள்ளே
ஜன்ஸி கபூர்
மனிதனை மெல்லக் குடிக்கும் மது/
இனித்திடும் முதலில் அழித்திடும் உயிரை/
உணர்வதை உறிஞ்சுகையில் பணமதும் கரையுதே/
கணப்பொழுது மயக்கத்தில் நோய்களின் ஆதிக்கம்
முளையில் கிள்ளாவிடில் மூளையும் சிதையுமே/
முத்தான வாழ்வுக்குள் சொத்தாகச் சோகமே/
ஜன்ஸி கபூர்
தென்னையை வைத்தால் பலன் கண்டு செல்வார்கள்
பனையை நட்டால் பார்த்துவிட்டுச் செல்வார்கள்
நிலத்தடி நீரைப் பதப்படுத்தி நமக்கே/
தலையால் தருமே நுங்காகி இனிக்க/
மடி பூக்கவே பல ஆண்டுகள்/
இடி தாங்கியே மழையும் பூக்கையில்/
கருணைத் துளிகளாய் கற்பக விருட்சமே/
காத்திடுவோம் பாரம்பரியத்தை சந்ததிகளுக்கும் கையளிப்போம்/
ஜன்ஸி கபூர்
சமுதாயச் சிற்பிகள்
-------------------------------
எண்ணும் எழுத்தும் சிந்தையில் பிசைந்து/
பண்பிலும் நடத்தையிலும் அழகினைப் பதிந்து/
கற்பித்தலுடன் தானும் இற்றையுடன் கற்றே/
தன்னம்பிக்கையுடன் ஆற்றலையும் மாணவருள் பதிக்கும்/
ஏணியாகும் ஆசான்கள் சமுதாயச் சிற்பிகளே/
ஜன்ஸி கபூர் - 05.09.2020
அலைகள் பூக்கும்
நுரைகள் சிரிக்கும்
மகிழ்ச்சி
அவனும் அவளும்
ரசித்தே நடந்திடும்
பொழுது
கண்கள் சிரிக்கும்
கனவுகள் ரசிக்கும்
ஏக்கம்;
எண்ணம் ஏங்கும்
இதயம் துடிக்கும்
தயக்கம்
கரங்கள் இணையும்
உறவும் மலரும்
காதல்
ஜன்ஸி கபூர் - 04.09.20
வகுப்பறையே வரம்தானே ஆளுமைகள் சிறந்திடவே/
வாழ்க்கையின் அனுபவங்களை பாடங்களாய் கற்கையிலே/
வெற்றியின் வழியினில் சாதனைகள் நமதாகும்/
கற்கண்டாய் திறமைகளும் காண்பவரைக் கவர்ந்திடுமே/
கல்வியினால் பெற்றிடும் நடத்தை மாற்றங்களே/
சிறந்த மனிதர்களை சமூகத்தினில் உருவாக்கும்/
ஜன்ஸி கபூர்
திருக்குறள்-4
#தற்காத்துத்_தற்கொண்டான்_பேணித் #தகைசான்ற_சொற்காத்துச்_சோர்விலாள்_பெண்.
கற்பின் அழகி
வாழ்தலும் சிறந்திட மங்களமான இல்லாள்/
வாழ்க்கைத் துணையின் உணர்வோடு இசைவாள்/
கற்பின் ஒழுக்கத்தினில் கருத்துடன் கலந்தே/
கட்டிய துணையுடன் புகழையும் காப்பாள்/
வல்லமை மனமே வனப்போடு மனையாள/
வார்த்தை அழகுடன் சோர்வின்றி வாழ்ந்திடுவாள்/
ஜன்ஸி கபூர்
அன்பிற்கும் உயிரூட்டுகின்ற அற்புத துடிப்பிது
துடிப்பிது படர்ந்தே துணையாகி வழிகாட்டுதே
வழிகாட்டுதே பாசமாக எதிர்காலமும் சிறந்திடவே
சிறந்திடவே எமக்குள் பாதைகளை வகுத்தாரே
வகுத்தாரே ஒழுக்க விழுமியத்தின் மரபுகளை
மரபுகளைப் பேணியே மாண்புகளைக் காத்திடவே
காத்திடவே வேண்டுமே அகிலமும் போற்றவே
போற்றவே வாழ்கின்றோம் அன்னைக் ஈடேது
ஈடேது வையகத்தினில் தாய்மை அன்பிற்கும்
ஜன்ஸி கபூர் - 03.08.2020
மழலை மொழி செவியின் நாதமே/
அழகுச் சொல்லில் தமிழும் தித்திக்குமே/
பழகும் மாந்தரும் மகிழ்வார் கொஞ்சி/
தவழுமே காற்றினில் மனமும் ரசித்திட/
ஜன்ஸி கபூர் - 31.08.2020
காத்திருந்தேன் நானும் பூத்திருந்தேன் மானே/
கருவறைப் பூமிக்குள் திருவுரு காட்டிடும்/
உந்தன் தளிர்த் தேக அசைவினில்/
எந்தன் தாய்மைக்குள்ளே இன்பத்தின் தேனூற்று/
ஜன்ஸி கபூர்
சந்தன வாசத்தில் செந்நிற ஆதவன்
சிந்திய ஒளியினில் சிறகடிக்கிறேன் தென்றலில்
தேடினேன் தந்தது மலர்களும் மகரந்தத்தை
தேன் அமுதத்தில் மனமும் மகிழ்ந்திடவே
வான் வெளியும் பதிக்கின்றதே சுவடுகளையே
ஜன்ஸி கபூர்
அன்னைதிரேசா அன்பின் சுடரானார் அகிலத்தினில்/
அரவணைத்தாரே அனாதைகளையும் பரிவுள்ள தாய்மையால்/
இரக்கத்தின் இதயமாய் ஒளியிட்டார் ஏழைகளுக்கும்/
இறந்தும் வாழ்கின்றாரே அற்புத அன்னையாக/
ஜன்ஸி கபூர் - 26.08.2020
அன்னை தெரெசா அன்பின் பண்பாளர்/
பண்பாளர் நெஞ்சத்தினில் கருணையும் பேரொளியாய்/
பேரொளியாய் திழ்ந்ததனால் நல்வாழ்வில் பலருமே/
பலருமே போற்றிடும் மனிதநேயத்தின் அன்னை/
ஜன்ஸி கபூர்