About Me

2012/06/10

மின்னல்


இருள் உடையும் - மனதோ
மருண்டு கதறும் !

செவி பிளக்கும் அதிர்வினில்
இதயம் வெடித்துச் சிதறும் !

வெட்ட வெளியைத் தழுவும் வேர்கள்
தொட்டு விடத் துடிக்கும் நிலவை!

முகிலேற்றங்களின் மோதுகை
திகிலோட்டத்துள் நம்மைத் திணிக்கும்!

கந்தகப்பூக்களின் வாசத்துள்
சந்து பொந்துகள் மூச்சுத் திணறும்!

நிலாச்சாறின் உறிஞ்சலை- வானம்
களவாய் வாந்தியெடுக்கும் !

அச்சத்தில் உறைந்து கிடக்கின்றோம்
ஆரடிக்கும் ஷெல்லிது!


- Jancy Caffoor-

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!