About Me

2012/06/10

மனிதம்


அராஜகங்களின் அணிவகுப்புக்கள்
அர்ஜிக்கப்படுகின்றன
அடிக்கடி இங்கே 
குருதிப்பூக்களால்!

பறக்கும் சிறகுகளை
உரித்தெடுத்து 
தீக்குள் சுருக்கும்
முகமூடிகளின் சில்மிஷங்களுக்கு
முகவுரைகள் எழுதுகின்றன
அரசியல் எழுத்தணிகள்!

மத வயலோரங்களில் 
பிரிவினை விதைத்து
வேற்றுமை விளைச்சலுக்காய்
ஒன்றுகூடுமிந்த பேரினவாதிகளின்
மயானங்களாய் உருமாறுகின்றன
நம் தேசம் 
அடிக்கடி!

மனிதங்களிங்கே 
அறையப்படுகின்றன சிலுவைகளில்!
இறையில்லங்களோ
வேரறுக்கப்படுகின்றன
மறை கற்றறியா துவம்ஷங்களால்!

விதைக்கப்பட்ட நம்பிக்கைகளின்
சிதைவால் 
கருகிக் கதறும் மாண்புகள்
உருகி வடிகின்றன ஆர்ப்பாட்டங்களாய்!

கலிகாலத் தெருக்கூத்துக்களின்
அரிதார இருளை 
களைத் தெறியவோ- இனி
சேவல்கள் கூவட்டும் !
சுந்தரப் பொழுதுகளும் சிரிக்கட்டும்!

ஜன்ஸி கபூர் 
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!