About Me

2012/06/11

ஏட்டுக்கல்வி



கல்விச் சாலையிலும்
கறையான் சேஷ்டைகளா 

அக்கினி வேள்விக்குள்
அவதாரமெடுக்கும் இளம் பிறைகள் 
கண்ணீரால் தினம்
தாகம் தணிக்கின்றனர்!

புத்தகங்களில் மட்டும் வாழ்வைத்
தொலைக்கும் - வெறும்
புத்தகப் புழுக்களாய் நெளிவோரின்
புளாங்கிதம்
அனலுக்குள் சாம்பராகும்
ஏமாற்றங்களே!

மனப்பாடங்களை ஒப்புவித்து
அனுபவங்களை நசுக்கும் - இவர்கள்
வாழ்வின் தோல்விகளை மட்டுமே
சேகரிக்கத் துடிக்கும் சீர்திருத்தவாதிகள்!

தம் கனவுகளைத் தொலைத்துவிட்டு
கானலுக்குள் மெய் தேடுமிந்த
இளசுகளின் விமர்சனத்தில் 
கற்றலின் கற்பும் வெந்து போகும்
அடிக்கடி!



ஓ !
யாரைக் குற்றம் சொல்வது 
கற்பவனையா !
கற்பிப்பவனையா!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!