About Me

2012/06/10

என் தாயே !



அந்த 
வேரறுந்த தளிரின் காயம்
எனக்குள்ளும் இரத்தக் கசிவாய்
கசிந்து கிடக்கும்!

தாய்மையின் நிழல் தேடித் தேடியே 
தடம் பதித்த சுவடுகளில்
கண்ணீர்க் கசிவு
கதை பேசும் ஈரலிப்பாய் !

ஒவ்வொரு நொடி ஆகர்சிப்பிலும்
அன்னை முகம் தேடித் தேடியே 
சந்தோஷம் ஆவியாகிப் போகும்!

இன்முகம் காட்ட 
கிளை விட்ட பல உறவுகளிலிருந்தும்
மனமேனோ 
தொலைவாகிப் போன அன்னைக்காய்
ஆர்ப்பரிக்கும்!

நாளை 
தந்தையின் வாலிபம்
வரவேற்கும் இன்னோர் அன்னையை!
உறவுகளும் பூக்கும்
வாழ்வும் விசாலிக்கும்!

இருந்தும் 
அந்த அன்னைக்காய் - என்
ஆத்மா மட்டும் வெம்பித் துடிக்கும்!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!