About Me

2012/06/10

திறந்து பார்க்காதே



துருப்பிடித்த என்னிதயத்தை
திறந்து பார்க்காதே அடிக்கடி!
இற்றுப் போன காதலின் எலும்புக்கூடுகள்
அங்கே மரண ஓலமிடுகின்றது !

நகரும் ஒவ்வொரு நிமிடங்களோடும்
போராடும் எனக்குள் 
முட்கம்பிகளின் சாம்ராஜ்யம்
 காவல் காக்கின்றது வேலி விரித்து 
யாரும் நுழையாமல்!

விடியல் துசு தட்டும் கருமை
அப்பிப் பிடிக்கின்றது என் வாலிபத்தில்
ஆக்ரோஷமாய்!
உயிரோ 
தன் கயிரறுக்க நினைத்து
வெம்மைக்குள் தியானித்துக் கிடக்கின்றது!

கார்கால முரசொலியால் 
விழிக்குளங்கள் விறைத்துக் கிடக்கின்றது!
வெள்ளம் வழியும் தருணங்களுக்காய்- என்
கன்னங்கள் தவித்துக் கிடக்கின்றது!

அரிதாரம் பூசும் முகமகிழ்வோ
காலாவதியாகிப் போகின்றது- என்
கவனிப்பாரற்ற உயிர்த்துடிப்போ
மௌனிப்புக்களுடன் அலைந்து போகின்றது!

திறந்து பார்க்காதே என்னை நீயும்
திறந்து பார்க்காதே- உன்னால்
இறந்து போன என்னிருதயத்தை- மீள
திறந்து பார்க்காதே!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!