About Me

2012/07/23

அன்பின் அவஸ்தை



மிரண்டோடாதே!
உன் ......
குண்டுவிழியில்
கண்டுகொண்டேன் என்னை!

உன் கருமித்தன
புன்னகையில்............
கழுவிக் கொண்டேன் - என்
சோகங்களை!

நீ யறியாமலே.............
உன்
காலடித் தடத்திலே
பதித்தேன் - என்
பயணப்பாதையை!

உன்...........
ஓரிரு வார்த்தைக்குள்ளும்.............
கோர்வையாக்கினேன் - என்
வாலிபக் கனவுகளை!

நீ..............
விரட்டிய போதும்
பரிவு தந்தேன் கவிதைகளால் - உன்
உறவுக்குக் கரமேந்தி!

சமூக அழுத்தங்களால் - நீ
எரிமலையாகும் போது...........
உன்னுள் படர்ந்தேன்
பனித்துளியாய்!

என் ..........
பல நாட் தேடல் நீ!
புரியவைக்க எனக்குள் - பல
யுகப் போராட்டங்கள்!

உன்............
அருகாமை நந்தவனத்தில்
பல மல்லிகைகள்
என் வசமாகின - உனக்கு
மாலை தர!

நீ அறிவாயா......!
உன் கனவு முகத்தில் கூட
அக்கினியின் ஆக்ரோஷம்
என்
வியர்வை பிடுங்கியது!

நீ தூவிய நேசத்துளி
சிறுதுளியே!
பார்...............
பாரையே பற்றிப்பிடிக்கும்
வேராய்.............
உருப்பெற்றதின்று !

உன் ஞாபகங்களில்
எனையும் நிரப்பிக் கொள்...........
நாளை உன்னுள்
நானும் வாழவேண்டுமென்பதால்!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!