About Me

2012/07/22

விடியல் பொழுதில்



சூரியச்சிறகுகளில்
கரி தடவி...........
மௌனித்துப் போன வானம்
சேவலின் ஸ்பரிசத்தில்
சிவந்து போகின்றது!

காற்றின் சீண்டலில்
வெட்கித்துப் போன பூக்கள்..........
மயக்கத்தோடு
மௌனித்துக்கிடக்கின்றது!

சிட்டுக்களின் குரற் சலங்கையில்
சுருதி கோர்க்கும் மொட்டுக்கள் - தாம்
மெட்டமைத்த கிறக்கத்தில்
வண்டுகளின் முத்தத்தை
மொத்தமாய் உள்வாங்கத்துடிக்கின்றன!

பறவைகளின் சலசலப்பில்
உறக்கம் மறக்கும் விழிகள்!
ஊமையாகிப் போன ஊரும்
ஊசலாட்டம் காட்டுகின்றன!

இயற்கையின் தரிசனத்தில்
நேற்றைய சோகம் தொலைத்து - என்
நெஞ்சும்............
புது விடியலில் நாணிக் கொள்கின்றன
நயமாக!



-Jancy Caffoor -




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!