About Me

2012/07/23

சிறகு விரிக்கின்றேன்


சிறு புள்ளியாய் - நீ
தொலைதூரம் பயணிக்கையில்............
சிறகு விரிக்கின்றேன் நானும்
உன் னிழலோடு!

உன் நகர்வுகளின் ஒலிப்பதிவுகள்
இப்போதெல்லாம்
பத்திரப்படுத்தப்படுகின்றன - என்
நெஞ்சில் ஞாபகங்களாய்!

உன் நேசத்தை - நான்
வாசிக்கும் ஒவ்வொரு கணங்களிலும்..........
குரல்நாண்கள் குதுகலிக்கின்றன!

உன் பார்வை படும்
பாலைநிலங்களில் - நானும்
ஜனனிக்கின்றேன் - உன்
பாதச்சுவடுகளாய்!

உன் சந்திப்புக்கள் மறுக்கப்படும்
என் பொழுதுகளின்
விழுதுகள்.............
அழுது புலம்புகின்றன!

என் வீட்டு ஷன்னல்களில்
ரகஸியமாய் படியும் - உன்
விம்பக் கவிதைகள் யாவும்
பிரமிப்புக் காட்டுகின்றன
பிரமிட்டுக்களாய்!

உன் காத்திருப்பில்
எனை நிறுத்தி
காதோரம் சிணுங்கல் பூட்டி
பூரித்த நொடிகளெல்லாம்...............
தொடுவானச் சூரியனாய்
அழகு காட்டுகின்றன
என் பூமியிலே!

சின்னவனே............
தென்றல் கூட எனைத் தீண்ட
அனுமதியில்லை !
இருந்தும்............
உன் கரம் தா - என்
கண்ணீரைக் கழற்றியெடுக்க!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!