About Me

2020/06/01

நினைவின் ஓடைகள்



நினைவோடையில் நனைகையில் சுகமான ஈரங்கள்!
கனவோரங்களில் உயிர்க்கின்றன தினம் இதமாக!

அலைகள் உருட்டும் நுரைகள் பிடுங்கி
கரையில் தைத்த கோலம் அழிகையில்
வெடித்த அழுகை யிப்போ வெட்கத்தில்!

மண் வாசனை நுகர்ந்து
நெடு நேரம் மழைதனில் நனைந்து
சளி பிடித்த அவஸ்தையும்
அழியாத மூச்சுத் திணறலாய் இன்றும்

காற்றோடு மோதியெழும் வண்ணக்கலவைகளின்
சிறகடிப்பும் எனக்குக் கவிதைதான்

எட்டு வயசில் காலெட்டா ஈருளிளியோட்டி
பூமி தொட்ட காயங்கள்  வடுக்களாய்

நினைவு ஓடைகளில் கலந்திருக்கும் அதிர்வுகள்
காலச்சுழியில் ஓயாத அலைகள்
நெஞ்சம் சுமக்கும் அழகிய அனுபவங்கள்

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!