About Me

2020/06/04

மயிலாடும் சோலை

இருள் உடைக்கும் நிலவுப் புரட்சியால்
கரும்படை பூ இதழ்களை மூட
களவாய் தேன் நுகர்ந்த வண்ணாத்துப்பூச்சி
மது உண்ட களிப்பில் கிறங்கியே
சிறகு விரித்து பறக்கத் துடிக்கும்
ரம்மிய அழகில் மனம் லயிக்கும்

மயிலாடும் சோலையிலே வண்ண மலர்கள்
எழில் கொஞ்சும் வாசப் பூக்கள்
தென்றல் வருடும் பாட்டுக் கேட்டே
தோகை விரித்தே ஆட்டம் போட
பச்சைக் கம்பளத்தில் நிழல் பதித்த
மயிலின் காத்திருப்பு அற்புதம் ஆனந்தமே

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!