About Me

2020/06/02

பசுமைக் குடைகள்



விண் நீண்டு மண் படர்ந்து//
வான்மழை தேடி வரட்சி கொல்லும்//

நிழல் போர்த்தி மண்ணுயிர் காத்து//
உஷ்ணம் உறிஞ்சும் வெப்பக் குடைகள்//
மரங்கள் பூமியின் பசுமைக் குடைகள்//

மண் பிணைத்தே வளம் சேர்க்கும்//
ஆகார மளித்தே ஆரோக்கியம் சேர்க்கும்//

காற்றிலே கரைந்தே மாசுக்களை உறிஞ்சும்//
பூவாகி கனிந்தே அழகாய்ப் புன்னகைக்கும்//

இலைகள் உதிர்த்தும் தளிர்த்தும் வளர்ந்து//
நலம் தரும் விருட்சங்களை நாமே//

சாய்க்கின்றோம் பட்டமரமாய்
வீழ்த்துகின்றோம் தனிமையில்//

ஜன்ஸி கபூர் 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!