About Me

2020/06/05

ஈரமான மனது

இயற்கைக்கும் இதயமுண்டு குளிர்த்திடும் ஈரமுண்டு/
உறவுகளைப் பிணைத்திடும் அன்பிலும் வாசமுண்டு/
உயிராகும் கருவருறையில் தாய்மையின் நிழலுமுண்டு/
உயிரினத்தில் பேதமின்றி ஈரமான இரக்கமுண்டு/4

அன்பும் கருணையும் பிசைந்திடும் மொழியால்/
பாசம் உயிர்க்கும் நேசம் வருடும்/
பூகோளம் புதுக்கோலம் கொள்ளும் அழகாய்/
உறவாகி இணைந்த நெஞ்சங்கள் மகிழ்வாகும்/8

ஐந்தறிவு ஆறறிவு எனப் பேதமில்லை/
அறிவுப் புரட்சியிலும்; ஈரம் உண்டு/
இரக்கம் மனதின் நல் அறமானால்/
பகை தவிர்க்கும் எண்ணம் வசமாகும்/12

பிறர் இடரில் கலங்கிடும் நெஞ்சில்/
இரக்கம் உயிரில் கலந்தே சிறக்கும்/
எல்லா உயிர்களிடத்தே அன்பு காட்டுகையில்/
மகிழ்ந்து புன்னகைக்கும் ஈரமான மனது/16

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!