About Me

2020/06/05

காலம் பதில் சொல்லுமோ

வரண்டு போன கானகங்கள் விலங்குகளின்
மரணக் கிடங்குகளோ மனிதம் மறந்தவர்களால்!
ஓர் மாதக் கரு சுமந்தே
தாய்மையால் தள்ளாடி தெருவோரம் திரிந்து

இரை தேடிய யானைக்கோ இவ்விதி
அனல் கக்கும் வெடி புதைத்த
அன்னாசி தின்னக் கொடுத்தவன் ஐந்தறிவால்
பலியானது யானையே அறமும் சிதைந்ததே

வெந்த புண் வலி தீர
நொந்து நெடுநேரம் நீரில் நின்றே
உயிர்  விட்டதே விதியும் நொந்ததே
நம் கண்களிலும் ஈரக் காயங்கள்

பஞ்சமா பாதகர்கள் வாழும் இப்பூமியில்
காலம் வருமோ  பதில் கிடைக்குமோ
அன்பும் மனதில் வாழுமோ
அகிலத்தின் அநாகரிகங்கள் வீழுமோ

ஜன்ஸி கபூர் 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!