About Me

2020/06/02

சிக்கிய மீன்கள்




விண் தொட்டு விளையாடும் மேகங்கள்
குளத்தில் பிம்பம் தேடும் மலைகள்
பசுமைச் சிரிப்பில் பாய்ந்தோடும் குளம்
குள நீரோட்டத்தில் மீன்கள் வேட்டை

பிள்ளைகள் வீசிய கைவலை நான்கில்
சிக்கிய மீன்களை நெஞ்சோரம் அணைத்தே
பசிக்கு இரையாக்கும் அவசரம் ஆனந்தம்
விளையாட்டு வயதிலும் பக்குவம் தானிது

மீன்களோ துடிப்பிழந்து துயரோடு போக
சாதித்த வெற்றிக் களிப்பில் பிள்ளைகள்
மதிய மீன்கறிக் குழம்பின் வாசம்
இனி பரவும் குளக்கரை ஓரம்

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!