About Me

2020/06/10

சுயமற்ற மனிதர்கள்

அழகிய வார்த்தைகளில் பொய்களை அணிந்தே
பழகும் வம்பர்கள் பழிபாவம் அஞ்சாதவர்கள்
இழிவான சிந்தனைகளால் உணர்வுகளை முறித்தே
அழிகின்ற தேகங்களுள் இழிகுணங்கள்
சுமப்பவர்கள்

பொல்லாத வாழ்வுகளுக்காக சுயநலங்களைத் தரித்து
நல்லோர்கள் நலன்களை வெட்டிச் சாய்ப்பவர்கள்
உள்ளத்தில் ஊக்கமின்றி சீர்கெட்ட மனிதர்களாய்
கள்ளத்துடன் வாழ்ந்தே கருணையைச் சிதைப்பவர்கள்

அகங்களின்  ஊற்றுக்களாய் கள்ளம் கபடம்
முகங்களின் கவசங்களாய்   ஏமாற்றுக்களும் துரோகங்களும்
தெம்புடன் சுற்றித் திரிவார்கள் சுற்றத்தார்களுடன்
தம் இஷ்டப்படி உலகத்தையே உருட்டிடுவார்கள்

சுடுகாடு தேசத்தின் முட் புதர்களே
அடுத்தவர் சுகங்களை அனலில் வேகவிட்டு
படுபாவிகளாய் நிதம் அலைதல் தகுமோ
தடுமாறும் வாழ்வுதனை ஒழுங்காக்கி வாழுங்கள்

 ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!