About Me

2020/06/12

உறவைத் தேடும் உயிர்கள்


இறைவன் செதுக்கும் உயிரின் உணர்வாய்//
தரிக்கும் உறவும் பெருஞ் செல்வமே//
அன்பில் அலைந்து மகிழ்வுள் நுழைந்து//
பந்தச் சிறப்பில் வாழ்தல் சுகமே// 

இருந்தும் நவீன மாயத் தாக்கம்//
இடைவெளி நீள தொலைவாகின்றோம் அந்நியமாய்//
உதட்டு வார்த்தைகள் மெல்லச் சுருங்க//
உதிர்க்கின்றோம் வெறும் புன்னகைத் துளிகளை// 

தொல்லை நோயில் தாங்கும் அணைப்பாய்//
அல்லல் தீர்க்கும் சொந்தம் சொர்க்கமே//
மரண நொடியில் தோள்கள் தாங்கி//
கண்ணீர் தெளித்து விடை யனுப்பும்// 

பாச மதை தனிமை வென்றிடுமோ//
இதயங்கள் உடைந்திட வேண்டாம் பிரிவில்//
இனித்து மகிழ்ந்திடலாம் இன சனங்களுடன்//
இரண்டறக் கலந்தே குதுகலிப்போம் குவலயத்தில்// 

ஜன்ஸி கபூர்  


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!