About Me

2020/06/11

ஆணுக்கு நிகராக


பசுமை வயலோரம் நெல்மணிகள் விளைந்திருக்கு//
நாற்றுக்கள் எல்லாம்  நீரால் வியர்த்திருக்கு//
சேற்றில் விரல் வரைந்த கோலங்கள்//
சோறாகி பசி தீர்க்கும் அமுதே// 4

வியர்வை வாசமே மண்ணுக்கு நேசமாம்//
அயராத உழைப்பில் அறுவடையே முத்துக்களாகும்//
வரப்போரம் கூடி இயற்கைக்குள் கசிந்து//
வயிறாற உண்ணுகையில் மனசும் நிறையும்//8

விண் ஒளி வெப்பத்தில் கரைந்து//
மண்ணுக்குள் பொன் விளைவிக்கும் மாந்தர்//
ஆணுக்கு சரிநிகராய் நெஞ்சுரத்துடன் தாமும்//
தரணியில் உழைக்கும் அழகைப் பாரீர்//12

ஜன்ஸி கபூர்  










No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!