About Me

2020/06/10

தாயுமானவன்

கரு உதிரத்தில் பூத்த மலர்
அருமைத் தாய் முகம் காணவில்லை
பொல்லாத நோய் வந்ததால் - அன்னை
பொன் உலகில் வாழ வழியுமில்லை

சின்னச் சிட்டின் விழி நீரில்
கன்னம் துடிக்குதே பசி ஓலமோ
அன்புத் தாத்தா பாலூட்டும் அழகில்
வண்ணக் குழந்தை மெல்லச் சிரிக்குதே

மண் குடிசை பளிங்கு மாளிகையாம்
தளர்ந்த கைகளே பஞ்சு மெத்தைகளாம்
குளிர் தீண்டும் வலியின்றி நெஞ்சக்
களிப்புடனே அணைத்திடுவார் தங்கத் தாலாட்டால்

பெற்றவர் போல் பரிவோடு உருகி
எண்ணத்தில் மழலையின் எதிர்காலம் தேக்கி
நெறி வாழ்தலில் இசைந்து போக
கற்றுக் கொடுக்க காத்திருக்கும் தாயுமானவன்

ஜன்ஸி கபூர்  

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!