About Me

2020/06/10

சுமையில்லா சுகங்கள்


அன்னைக்குப் பிள்ளை அன்பான வரமே
அரவணைக்கும் கரங்களில் அடங்குதல் சுகமே
பரவசத்தில் தாய்மை நெகிழ்தலும் அழகே
இறைவன் படைப்பில் உயிர்கள் ஒன்றே

இருப்பிடம் திரும்புகின்ற அந்தி நேரம்
விரும்பி அணைந்து வருடுகின்ற சேய்கள்
அருகிலிருந்து பசியாற்றும் தாய்ப் பாசத்திற்கு
தெருவோரம் திரை இங்கு விரிக்குமோ

மானிடர் பேதங்களால் திசை மாறிடுகையில்
தன்னலம் கருதாது பரிவைப் பகிர்ந்திட
உறவுகள் தேவையில்லை உணர்வுகள் போதுமே
ஐந்தறிவின் மேன்மை  பாடமாய் நமக்கு

ஜன்ஸி கபூர்  







No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!